Monday, November 21, 2016

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல

ஆண்

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல
சறுக்கி விழுந்து போனே இந்த ஆம்பள

போத தரும் கள்ளுப் பான நீயடி
இன்னக்கி கோப்பட்டு நிக்கிறியே  ஏனடி

வெண்டிக்காயி வெரலு நானும் தொட்டாச்சி
அதப் பாத்துபுட்டு  வெடிவெடிக்கிது பட்டாசு

ஆள வெட்டும் பாக்குவெட்டி நீயடி அதில
மாட்டிக்கிட்ட பாக்கு இங்க நானடி

போதையிலும் உன்ன தானே தேடுறேன்
நீ இல்லேனாக்கா சாவக்கூட தோணுதே

ஒதட்டுல நீ சாயம் பூசி போறியா
இல்ல உதட்டு மேல மாயம் பூசி போறியா

காதுல நீ ஜிமிக்கி மாட்டிப் போறியா
இல்ல எனக்கு மட்டும் டிமிக்கி காட்டிப் போறியா

உரிச்சி வச்ச தோடம் பழம் நீயடி
இப்போ பழிப்பு காட்டி போறதென்ன ஞாயம்டி

பச்சோந்தியாயா இருப்பவளே கேளுடி
நீ கண்ணுக்குள் வச்சிருக்க வேலுடி

நீ பார்த்துபுட்டா ஏறுதுங்க கிக்கு டி
என்ன கொன்னுப்புட்டு போறதா ஒன் திட்டம் டி

நெஞ்சுக்குள் நெருப்ப ஏன்டி மூட்டுற
அதில் சிரிச்சு சிரிச்சு பெற்றோலத்தான் ஊத்துற

சாம்பலாக ஆகிட்டேன் நானும்தான்
அதையே ரசிச்படி போறியே நீயும்தான்

உன் சொந்தக்காரி யாரு பத்ர காளியா
உன் பேச்செல்லாமே இருக்குதடி போலியா

துண்டுதுண்ணா நானும் ஒடஞ்சி போறேனே
கண்ணும் நெஞ்சும் கலங்கி கலங்கி வாடுறேன்

ஏடிஎம் ஆ என்ன தானே தேடுற ஏன்டி
காச்சில்லன்னா கழட்டி விடப் பாக்குற

கொரங்கு புத்தி நீயுமாடி காட்டுற
உன்னய நிறுத்தனுன்டி தண்ணியில்லா காட்டுல

பேயுமில்ல பிசாசுமில்ல இங்கடா
இது ரெண்டு சேந்த படைப்புதான் பொண்ணுடா


பெண்

பொண்ணுங்கள எக்குத்தப்பா நெனக்கறியே
ஆனா பெண்ணில்லனா வாழ்க்கல்லன்னு பொலம்புரியே

டைம்பாஸூக்கு பொண்ணுங்கள தேடுறியே
ஆனா டைம்போம் என்று பொண்ணுங்கள பழிக்கிறியே

ரோசா என்று சொல்லித்தானே மயக்குறியே
ஆனா காச மட்டும் செலவழிக்க தயங்குறியே

நாயப் போல சுத்தி சுத்தி நிக்கிறியே
ஆனா நாய விட கேவலமா நெனக்கிறியே

கொரங்கு போல மனசு மனசு தாவுறியே
ஆனா உத்தமனா ஊருக்கு நீ காட்டுறியே

வேலி தாண்ட நேரம் எது பாக்குறியே
ஆனா தாலியத்தான் கேட்டுப்புட்டா நழுவுறியே

செல்லம்கொஞ்சி சாதிக்கத்தான் பாக்குறியே ஆனா
ஷசெல்|லக்கூட தருவதற்கு மறுக்குறியே

சந்தேகந்தான் புடிச்சிக்கிட்டு பாக்குறியே
சந்தோசத்த ரெண்டு துண்டா ஒடக்கிறியே

அப்பன நீ தப்புத் தப்பா பேசுறியே
தப்பெதுவும் செய்யாதபோல நிக்கிறியே

Tuesday, November 1, 2016

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே

பல்லவி

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே
தீ புடிச்சு எரியுதே
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் ரத்தம் வழியுதே

அனு பல்லவி

கனிமொழியே கனிமொழியே
கண்ணெதிரே உன்னை நான் தொலைத்தேன்
என் விழியே என் விழியே
என் விரல் கொண்டு உன்னை நான் துளைத்தேன்


சரணம் 1

நான் வளர்த்த காதல் செடியோ
திசைகள் மாறி பூத்ததென்ன
உயிர்துளியான எந்தன் காதல்
உருமாறியே போனதென்ன

மாயத் திரையோ மேலே எழுந்து
மனதின் திரையை மறைத்ததென்ன
மயிலிறகு கொண்டு வருடி வருடி
மனப் பாறையும் கரைந்ததென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

சரணம் 2

வானவில்லை கண்ட பெண்மை
வானம் என்னை மறந்ததென்ன
வளைந்தோடிய நதிகள் எல்லாம்
வழிகள் மாறி போனதென்ன

விண்மீன் அழகில் மாட்டிக்கொண்டு
நிலவின் ஒளியை மறுத்ததென்ன
கானல் நீரில் கனவினைத் தொலைத்து
கண்களை கண்களை மறுப்பதென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்

பல்லவி

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்
பாசம், காதல் இருக்காதே
உனக்கும் புதிதாய் எதிரிகள் முளைத்தால்
சிகரம் தொடுவாய் மறக்காதே

சரணம் 1

கண்களில் விழுந்திடும் தூசியைக் கண்டு
அழுதல் என்பது ஞாயமில்லை
சூரியன் தலையின் உன் பேரெழுதிடு
உனக்கந்தச் சூரியன் தத்துப்பிள்ளை

தோல்விகள் கண்டு துவண்டிருப்பதற்கு
உனக்கென்று பிறிதொரு நேரமில்லை
நெஞ்சுக்குள் ஆழமாய் நம்பிக்கை விதைப்பாய்
வெற்றிகள் உனக்கு தூரமில்லை

சரணம் 2

கேலிகள் செய்வார் கோள்களைச் சொல்வார்
எதையும் எண்ணி நீ வருந்தாதே
பலமுறை சொல்லியும் திருந்தா கூட்டம்
இனி ஒருபொழுதும் திருந்தாதே

பாறைக்குள் இருக்கும் செடிகள் எல்லாம்
முட்டி முளைத்திடும் துணிவோடு
வாழப் பயந்து நீ இருக்காமல்
வாழப் பழகிட துணிந்தோடு

பௌர்ணமி போலெந்தன்


பல்லவி
ஆண்
பௌர்ணமி போலெந்தன்
பருவத்தில்  வந்தவளே
மௌனத்தால் பேசி என்
மனதுக்குள் வாழ்ந்தவளே

பெண்
வீணையாய் மாறி என்
இளமையை மீட்டியவனே
காதல் இதயத்தில்
வர்ணங்கள் தீட்டியவனே

சரணம்

பெண்
இப்படி இப்படி தான்
காதலே பிறக்குதா?
காதல் வந்த பின்
உலகமே மறக்குதா?

ஆண்
உனக்கும் என்னைப்போல் – பல
சிறகுகள் முளைக்குதா..
கைகோர்த்து நடந்திட அடி
ஆசையும் அழைக்குதா?

பெண்
என் பெயரை நீ சொல்லிடும்போது
புதிதாய் நான் பிறந்தேன்


சரணம் 2

ஆண்
துளி புன்னகை புரிகையில் - அடி
தென்றல்தான் மோதுதா
இனியவள் உன்னைத்தான்  - என்
இதழ்களும் தேடுதா?

பெண்
உன் மனம் உன்னிடம் - வந்து
முகவரி கேட்குதா
இரவுகள் இரவுகள் உன்னை
எண்ணியே நீளுதா?

ஆண்
உன்னை நான் கண்டுபிடித்தேன்
என்னை நான் தொலைத்தேன்!!!

பாடலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

நான் தந்த மடலினை

பல்லவி

நான் தந்த மடலினை
நடுவீதியில் எறிந்தவளே
நான் தந்த மனசை
என்ன செய்யப் போகிறாய்?

எனக்குள் தீ கடலினை
பொங்கியெழச் செய்தவளே
உனக்காக வாழும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?

சரணம் 1

பாசத்தைப் புரிவதில்
அசட்டையாக இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் மட்டும்
அட்டையாக இருக்கிறாய்

தூக்கத்தை கெடுப்பதில்
ராட்சசியாய் இருக்கிறாய்
துக்கத்தை மட்டும்
குறைச்சலின்றி தருகிறாய்


சிட்டாக சிறகடித்து
வெட்டென மறைகிறாய்!

சரணம் 2

எல்லாமே மறந்திருந்தால்
என் முன்னே வருகிறாய்
உன்னை நாடி நான் வந்தால்
உடனடியாய் மறைகிறாய்

விடை தெரியா வினாவாக
எனக்குள்ளே எழுகிறாய்
அணை கடந்த வெள்ளம்போல்
உயிருக்குள் விழுகிறாய்

சட்டென்று என்னைப் பார்த்து
மொட்டென மலர்கிறாய்!

வெண்மதியே வெண்மதியே

பல்லவி

பெண்
வெண்மதியே வெண்மதியே
ஒருமுறை என்னைப் பாராய்
உன் முகம் காண ஆவல்கொண்டேன்
அனுதினம் என்னிடம் வாராய்

அனு பல்லவி

பெண்
ஒற்றைப் பூவின் காதல் இது
என்றும் என்றும் தீராதது
நாணம் வந்து தாலாட்டுது
கேளாய்


சரணம் 1

ஆண்
பகலவன் விழித்து காலையில்
பவனி வர முதல்
வேண்டும் வேண்டும் அல்லிப் பூவே
உன் இதழ்

பெண்
நமது காதலின் சாட்சிகளோ
அந்த கரு முகில்
புயலும் தோற்கும் எங்கள்
காதலின் உறுதியில்

ஆண்
ஒருமுறை தீண்டு
உயிர் கொஞ்சம் கூடும்
மறுமுறை தீண்டு
மரித்திட தோணும்

சரணம் 2

பெண்
மழையின் சாரல் உந்தன்
பாசம் அறியலையோ
குளிரும் தென்றல் உந்தன்
காதல் உணரலையோ

ஆண்
வெள்ளி விண்மீன் உந்தன்
கருவிழி காணலையோ
துள்ளி ஓடும் நதிகள்
உன் இடை பார்க்கலியோ

பெண்
இரு விழி பாரு
இதயத்தைக் கூறும்
உயிர் வரை பாரு
காதலின்னும் கூடும்  

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே

பல்லவி

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே
மலர்ச் செண்டு விழிகளில் பாம்புகள் நெளியுதே
உயிரோடு கொன்றவளின் நினைவுகள் தெறிக்குதே
கைகோர்த்த காலங்கள் நெருப்பாக எரிக்குதே

இது இது இது
காதலின் துரோகம் என்பதா
நரம்பினில் ஓடுவதெல்லாம் நஞ்சென்பதா?


சரணம் 1

மணற் பரப்பினில் மங்கை மடியினில்
மனசெல்லாம் மலர் பூத்ததே
இன்று எண்ணியெண்ணி அதை அழித்திடும்
காலங்கள் எனக்கானதே

உயிர் திருகிடும் உயிர் திருகிடும்
காலங்கள் ரொம்ப கனிவானதே
இன்று கனிவெல்லாம் வற்றி உருமாறி
காயங்கள் எனக்கானதே


சரணம் 2

நான் அழுதிடும் நொடி எழுதிடும்
வரி எல்லாம் உனக்கானதே
எண்ணி துடித்திடும் மனம் வெடித்திடும்
வலியெல்லாம் எனக்கானதே

பொழுதெல்லாம் பின் இரவெல்லாம்
பறவைகள் சுகம் காணுதே
இடையிடை அதை காணும் மனம் மெல்ல
ஒரு மெழுகானதே சுமை கூடுதே

Sunday, October 16, 2016

நீயே எந்தன் காதல் ஜோதி

நீயே எந்தன் காதல் ஜோதி

நானே உந்தன் வாழ்வின் பாதி


கோடிப் பூக்கள் இன்று

நெஞ்சில் ஒன்றாய் பூத்ததென்ன


உயிரே

காதல் வானில் கவிதையாக

பூத்த பௌர்ணமியே
..
சின்னச் சிரிப்பில் என்னை வென்ற

தங்கத் தேன் துளியே



கண் ஜாடையில் கண் ஜாடையில்

கரைந்தேனே

உன் பார்வையில் உன் பார்வையில்

தொலைந்தேனே


பேசும் ரோசாப் பூவே

உன்னால் நெஞ்சில் காதல் வாசம்

Thursday, September 22, 2016

ஒரு பார்வை பார்த்தால் போதும்

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

உயிரிலே பூத்திடும் புதிய பூவே
நீயே நீயே
மனதிலே தோன்றிடும்
நிலவு நீயே காதல் தீயே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

பனியாய் பொழியும் உன்
நினைவில் குளித்தேன்
இரவாய் பகலாய் நான்
என்னை மறந்தேன்

இளமைச் செடியில் நான்
பூக்கள் பறித்தேன்
பூவின் சிரிப்பை நான்
புதிதாய் ரசித்தேன்

வார்த்தைகள்; ஏதடி
காதலி உன்னைப் பாட
ரசிக்கிறேன் நானடி
சிலைகள்கூட தோற்குமே

உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்
என்னோடு நீ சேரு
என் ஜீவன் உயிரோடு வாழும்
நீளுமே....

நிழலுக்கு நிறம் தந்த
மாந்தோப்புக் கிளியே
நீ வேறு நான் வேறா
சொல்ல்லலு

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசி போல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

Friday, July 29, 2016

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்

பல்லவி

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்
வீழ்ந்தால் உன் நெஞ்சோடு சாயணும்
உன் பார்வை என்றும் நானாகனும்

வசந்தம் கண்முன்னே தோன்றனும்
வசந்தத்தின் வாசல் நீயாகனும்
என் காதல் கடல் தாண்டி சேரணும்

நரணம் 1

சேர்த்து வைத்த இனிமையெல்லாம்
சில்லறையா சிதறுது
பூத்திருந்த பூக்கள் இப்போ
ஒன்னு ஒன்னா உதிருது

ஏற்றி வச்ச தீபச் சுடர
காத்து வந்து விரட்டுது
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
சாவி கேட்டு மிரட்டுது

சரணம் 2

வாட்டி நிற்கும் ஏக்கமின்று
வட்டம் போட்டு சுத்துது
போட்டி போட்டு என் மனசும்
நெருப்பு இன்றி பத்துது

காலம் நேரம் சதிகள் செஞ்சு
நம்ம பிரிச்சு வைக்குது
ஊசி போல வேதனைகள்
உள் நுழைந்து தைக்குது

பெண்ணே பெண்ணே பொங்கி எழு

பல்லவி

பெண்ணே பெண்ணே பொங்கி எழு
வன்செயல் கண்டால் சீறி எழு
மௌனம் இனியும் வேண்டாம்
சத்தமிடு!

கடந்த காலம் மறந்து விடு
கவலை யாவும்; துறந்து விடு
வீரம் கொண்ட வேங்கையாய்
எழுந்துவிடு!

நீ தானே உலகின் கண்ணம்மா....
நீயின்றி உயிர்கள் ஏதம்மா

வானைத் தட்டும் கைகள் உனதாகட்டும்
உந்தன் பெருமை ஓங்கட்டும் எட்டுத் திக்கும்!

சரணம் 1

பெண்ணை மதித்திங்கு வாழும் ஆடவர்
எத்தனை பேரம்மா?
அவள் கண்ணீர் துடைத்திட துடிக்கும்
உள்ளம் உண்மையில் யாரம்மா?

அச்சத்தில் வாழ்ந்த பெண்களை யாருமே
மதித்திடவில்லையம்மா
போர் வாளை போன்று தைரிய உள்ளம்;
வேண்டும் அவசரமா

இனி பார்வையில் பயங்களில்லை
தோல்வியும் உனக்கு இல்லை
புறப்படு பெண்ணே புது விதி செய்ய!

தீ கூட தொட்டால் தான் சுடும்
பெண் பார்வை பட்டாலே சுடும்


சரணம் 1

அன்னை தெரேசா என்பவர் உலகம்
போற்றிடும் தாயம்மா
இந்தியச் செல்வம் கல்பனா சாவ்லா
இதயத்தின் தீபமம்மா

சுசந்திகா, சானியா மிர்சா
சாதனைப் பெண்களம்மா
மக்களை மதித்த சந்திரிக்கா அம்மை
வீரத்தின் வடிவமம்மா

கணவர் காந்தியுடன்
அறப் போர் செய்து வந்த
கஸ்தூரி Bபாயும் சாதனை பெண்ணம்மா

பெண்தானே வாழ்வின் ஆதாரம்
அவளின்றி யாவும் சேதாரம்

தள்ளிப் போகாத

பல்லவி

ஆண்
தள்ளிப் போகாத
என்ன தாண்டிப் போகாத

பெண்
கிட்ட வராத
நீ முத்தம் தராத


சரணம் 1

ஆண்
நீ ஆசை ஊறும் பான
நான் அடங்கிடாத யான
பெண்
நீ குடிக்க பார்த்த தேன
நீயே கவுந்து போன

ஆண்
நீ போதை தரும் மோரு
வந்து என்னுடனே சேரு
பெண்
நான் ஆடி வரும் தேரு
அதில் அழகை மட்டும் பாரு

சரணம் 2

ஆண்
நெஞ்சில் இருக்கு வீரம்
வா தோப்பு பக்கம் போவோம்
பெண்
போய்யா அந்த ஓரம்
நானில்லை உந்தன் தாரம்

ஆண்
கள்ளச் சிறுக்கி வாடி
போதை ஏத்திப் போடி
பெண்
நான் போயிடுவேன் ஓடி
நீ வளக்கப் போற தாடி

ஏனிது ஏனிது

பல்லவி

ஏனிது ஏனிது
மாற்றங்கள் ஏன் ஏன் இது
தன்னாலே உன் கண்கள்
என்னைப் பார்த்தது
உன்னாலே இதயத்தில்
காதல் பூத்தது ஏனிது?

அனு பல்லவி

நிலவாக நெஞ்சம் குளிர்ந்தது
வெண்முகிலாய் இதயம் பறந்தது
பறவை போல் சிறகு முளைத்தது
உள்ளத்தில் அலையடித்தது

சரணம் 1

புல் என்னில் பனித்துளி போல
உந்தன் ஞாபகம் துளிர்க்கிறதே
சொல்லடி சகி என்னடி செய்தாய்
இருதயம் இப்படி சிலிர்க்கிறதே

இரவிலும் இவள்
பகலிலும் இவள்
நினைவுகள் தொல்லை தருகிறதே

உணர்விலும் இவள்
உயிரிலும் இவள்
காதல் மழைத் துளி பொழிகிறதே

நீயில்லா வாழ்வெனக்கு தேவையில்லையே!


சரணம் 2

கனவில் இவள் கைவிரல் கொண்டு
எந்தன் கன்னம் வருடுகிறாள்
நனவில் இவள் கண்கள் கொண்டு
எந்தன் நெஞ்சை திருடுகிறாள்

எது இது என
இது அது என
பல கற்பனைகள் தருகின்றாள்

விருவிரு என
துருதுரு என
நகர்ந்து சிரித்து கொல்கின்றாள்

இரவில் அவள்; வானவில்லை காணச் செய்கிறாள்

தவறாமல் தவறெல்லாம்


பல்லவி

தவறாமல் தவறெல்லாம்
செய்கிறானே சைத்தான் - அவன்
செய்யும் தவறு போதாதென்று
எம்மை செய்ய வைத்தான்


சரணம் 1

வீராப்பு பேசின பையன் பெண்
மாராப்பில் தன்னை தொலைப்பான்
சாராயம் தொடாத பையன் அந்த
காதல் போதையில விழுவான்

பெண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
கண் ஜாடயில் கட்டுண்டு கிடப்பான்
மண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
பேராசையில் எல்லாம் மறப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே


சரணம் 2

குருவியை கல்லால் அடிப்பான்
பின் பாம்பை கையால் பிடிப்பான்
அருவியில் நஞ்சைக் கலப்பான்
பின் தண்ணீர் உயர்வென படிப்பான்

காதலை காசுக்குள் தொலைப்பான்
பின் காதலே கண்ணென்று உரைப்பான்
ஏழைகள் தோழர்கள் என்பான்
பின் ஏழையைக் கண்டால் முறைப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே

அடியே நீயே கொலக்காரி

பல்லவி
ஆண் அடியே நீயே கொலக்காரி உன் அழகு என்ன கொல்லுதடி
பெண் திருடா அருகே வர வேண்டாம் நீ தள்ளி நில்லு ரெண்டு அடி

அனு பல்லவி
ஆண்
கொழந்த மனசுக் காரேன்டி கொஞ்ச நானும் வாரேன்டி
பெண் வந்திடாதே முன்னாடி - நான் தொட்டா உடையிற கண்ணாடி

சரணம் 1
ஆண் ஆளான பொண்ணே ஒன் நெனப்பால் ஆறடி உயரம் தேயுதடி.. பொன்மானே உன்ன ரசித்தேனே மனசு ஒம்மேல் சாயுதடி..
விண்மீன்கள் நெறஞ்ச வானத்துல நிலவு தனியா காயுதடி.. உருவான காதல் கரைபுரண்டு உயிரே ஒம்மேல் பாயுதடி..

சரணம் 2
பெண் சமநிலை இன்றி இருதயமும் அலைகள் ஆடும் கடலாகும் பார்வை தோட்டா துளைக்கிறதே இதுவும் காதல் மடலாகும்
ஒருநாள் உன்னை பிரிந்தாலும் மனதில் காதல் குளிர் ஏறும் உன்னைக் கண்ட பின்னாலே மருந்தே இன்றி குணமாகும்

காதல் வந்த பின்னாலே

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

.....
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே

சாலை வழியே உன்னோடு
நானும் நடைகள் பயின்றேன்
காலை மாலை தெரியாமல்
உந்தன் நினைவில் தவித்தேன்

...
என்னை இழுக்கும்
உன் விழியில் விழுந்தேன்
ஜீவன் சிலிர்க்க உன்
அருகில் இருந்தேன்

கரும்பாய் இனிக்கும்
உன் பேச்சில் கவிழ்ந்தேன்
இதமாய் இருக்கும்
உன் மூச்சில் தொலைந்தேன்

காவியம்ம் தோன்றுமே
காதலி நீ வந்தால் போதும்....


....
உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்...
என்னோடு நீPயிருந்தால்
என் ஜீவன் இன்னும் வாhhhழும்.... நீ....ளுமே

காதோரம் சொல்கின்றாய் கவிதைகள் கோடி
சேதாரமில்லாத தங்கமே வாடி

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்



உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்


ஆசியாவின் அதிசயப் பூவே

ஆண் 
ஆசியாவின் அதிசயப் பூவே
கடல் சூழ்ந்த இலங்கைத் தீவே
சீ..கிரியா ஓவியம் நீயே
என்னைக் கொல்லும் அழகிய தீயே

குளிர் மார்கழித் தூறல் போல்
நெஞ்சில் பெய்திடும் அழகே நீ
பனித் தூறிடும் நுவரெலியாவின்
குளிரே இளந் தளிரே

பெண்
தண்டவாளமாய் நீயிருந்தால்
யாழ்தேவியாய் நானிருப்பேன்
வளைந்தோடிடும் மகாவலியாய்
உன்னுடனே நான் இணைவேன்

ஆண் 
ஆசியாவின் அதிசயப் பூவே
கடல் சூழ்ந்த இலங்கைத் தீவே
சீ..கிரியா ஓவியம் நீயே
என்னைக் கொல்லும் அழகிய தீயே

பெண்  
என் அன்பே என் அன்பே
 கொழும்பு துறைமுகமே
உன்னைக் காண நான் வருவேன்
ரத்தின புரி தந்த
மாணிக்கமே நீயே

ஆண்  
கிண்ணியா மாம்பழமே
உன்னை பறிப்பேன் நான் தினமே
கன்னியா சுடு கிணறே
உன்னை குளிப்பேன் நானே

பெண்  
என்னைத் தீண்டும் நேரம் எல்லாம்
துன்ஹிந்தை நீர் வீழ்ச்சியானேன்
நீ என்னை அணைக்கும் நொடியில்
கல்கிஸ்ஸை கடல் போல் ஆனேன்

வெப்பம் மேலிடும் வெலிகமயின்
ஐஸ்கிரீம் ஆக நான் ஆனேனே
குளிர் தியத்தலாவை தேநீர்;
போல் நானும் உனக்கானேன்

பூவே பூவே காதல் பூவே

பல்லவி

பூவே பூவே காதல் பூவே
நீயே என்னை நேசித்தாயே
யாவும் இன்பமடி – உன்னால்
வாழத் தோணுதடி

அழகே

சரணம் 1

தங்க சிலையே
நானும்; உன்னை
சேரும் நாள் எதுவோ

காதல் வானில்
நானோர் பறவை
உன்னை வட்டமிடுவேன்

கண் ஜாடையில் கண் ஜாடையில்
கரைந்தேனே
உன் பார்வையில் உன் பார்வையில்
தொலைந்தேனே

பேசும் ரோசாப் பூவே
உன்னால் நெஞ்சில்
காதல் வாசம்

காதலி பூமொழி பேச்சென்னை
என்னை அள்ளுதே
ஓஹோஹோ
காதலி பாரடி என் காதல்
காதல் வெல்லுதே

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்

ஆண்

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்
பூவின் இதழாய் அதரம் கண்டேன்
நெஞ்சம் பறித்திடும் அழகைக் கண்டேன்
வற்றிவிட்ட உன் இடையைக் கண்டேன்

உன்னால் தோன்றுதே பொற்காலம்
உலா போகுதே வெண் மேகம்
உன்னைத் தேடுதே என் வானம்
நிலவே ஏ நிலவே

பெண்

அலை மோதிடும் கடலாக
என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ



ஆண்

நதியே நான் தனியே
காத்திருந்தேன் வா அருகே
கவியே இளம் பிறையே
நீ பேசும் கிளியே



பெண்
என்னைத் தீண்டிடும் நேரம் எல்லாம்
கண்கள் பார்த்து நீ சிரிப்பாய் சிரிப்பாய்
கொஞ்சம் நானும்தான் கோபம் கொண்டால்
என்னைப் பார்த்து நீ ரசிப்பாய் ரசிப்பாய்

அலை மோதிடும் கடலாக
 என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ

நீயும் நானும் சேரும் காலம்

பல்லவி

பெண்
நீயும் நானும் சேரும் காலம்
மேலும் மேலும் இன்பமாகும்
மாசம் வருசமென்று உன்கூட
வாழத் தோணும்

ஆண்
விழி மேகங்கள்
காதல் நீரை பொழிகிறதா
சிறு பார்வைகள்
ஊசி போல நுழைகிறதா

இருவர்
இதயத்தில் காதல் கிளிகள்
கொஞ்சிப் பேசி மகிழ்கிறதா

சரணம் 1

ஆண்
காதல் தூண்டில் போட்டவளே
நானும் சிறு மீனா
லட்சம் இன்பம் தந்தவளே
நீயும் வரம் தானா



பெண்
மனதை சுற்றிப் பாக்குறியே
நானும் மலர்த் தேனா
வெட்கம் தின்னப் பாக்கிறதே
அருகே வர வேணா


சரணம் 2

பெண்
காதல் நோயில் ஆசைப்பட்டு
நானும் வீழ்ந்ததேனோ
வலிகள் கூட இன்பமாகும்
காதல் வந்தால் தானோ

ஆண்
பார்வை தனை என் கிழக்கில்
வீசிப் போனதேனோ
கருவிழியால் மௌன மொழி
பேசிப் போனதேனோ

காலம் என்மேல் கோபம்கொண்டு

பல்லவி

காலம் என்மேல் கோபம்கொண்டு
காதல் வலியைத் தந்தது..
வலியை மட்டும் தந்துவிட்டு
வாழு என்று சொன்னது

அனு பல்லவி

வாழ்ந்த வாழ்க்கை போதுமேன்று
வாழ்க்கை எனக்குச் சொன்னது
நினைவுகள் நெஞ்சில் மேலோங்கி
என்னை வதைத்து தின்றது

சரணம் 1

தீபம் ஏற்றும் எண்ணத்தில்
தீப் பிடித்துக் கொண்டது
லாபம் என்ன உள்ளதென்று
எந்தன் வாழ்வைக் கொன்றது

சாபம் வந்து விழுந்ததுபோல்
காதல் மரமும் காய்ந்தது
கோபம் கொண்ட விதிதானோ
சோகம் தந்து ஓய்ந்தது

சரணம் 2

பூவாய் நினைத்த காலங்கள்
புயலாய் மாறிப் போனது
தேனாய் இனித்த நினைவெல்லாம்
தேளைப் போல ஆனது

பௌர்ணமி போன்ற என் காதல்
தேய் பிறையாகிப் போனது..
சமுத்திரம் போன்ற கனவெல்லம்
ஓடை என்று ஆனது

Wednesday, May 4, 2016

இரு விழி என்ன இலக்கியமா

பல்லவி

ஆண்
இரு விழி என்ன இலக்கியமா
இதழ்கள் இரண்டும் லேகியமா
இதயத்தில் நான் சௌக்கியமா
சௌக்கியமா

பெண்
கருவிழி மயக்கிடும் காந்தமா
காணணும் நான் நாளாந்தமா
கண்கள் என்னுயிர் ஏந்துமா
ஏந்துமா

சரணம் 1

ஆண்
பகலிரவாய் கொல்லுரியே
பாசக்கார பூவே பூவே
உன்னத் தின்ன வந்திடுவேன்
ரோசக்காரன் நானே நானே

பெண்
அக்கம் பக்கம் யாருமில்ல
வேணாம் போ மாமா
வெக்கம் பிச்சுத் தின்னுதென்னை
ஆமா  அட ஆமா


ஆண்
அடியே இளஞ்செடியே
நீ பூக்களின் தோழியா
புயலாய் மாறுவியா?



சரணம் 2


ஆண்
ஒத்தையடி பாதையிலே
வாரேன் தனியே தனியே
ஒத்துக்கடி அத்தப் பொண்ணே
போவோம் நாம் தனியே

பெண்
அணைச்சாலும் சத்தமில்ல
திருடா ஏய் திருடா - இது
தாலி தந்தா குத்தமில்ல
பொறுடா அட பொறுடா

ஆண்
நினைவில் என் கனவில்
நீ தினம் தினம் வருவாயா?
இதயம் தருவாயா?

Sunday, April 24, 2016

‪‎பனிச் சாரல் மனதில் தெறிக்குது

பல்லவி

ஆண்‬ -
பனிச் சாரல் மனதில் தெறிக்குது
பெண்ணே உன்னாலே..
அகிம்சையாய் யுத்தம் செய்கிறாய்
கண்ணே கண்ணாலே

‪‎பெண்‬ -
கனி கன்னங்கள் சிவப்பாய் மாறுது
கண்ணா தன்னாலே..!
ஓ. ..மனசோடுது என்னை மீறி
உந்தன் பின்னாலே!

சரணம் 1

பெண் - 
கண்ணே உன் எண்ணங்கள்
நெஞ்சில் அலைமோதும்
ஓயாமல் என் மனம்
தினமும் உனைத் தேடும்

ஆண் - 
நீ வாங்கும் மூச்சிலே
என் ஜீவன் கலந்தோடும்
நீ பார்க்கும் பார்வையில்
காதல் வழிந்தோடும்


சரணம் 2

ஆண் -
வளைந்தோடும் நதிகளின்
அழகும் நீ தானே..
அசைந்தாடும் பூவிலே
உந்தன் முகம் தானே

பெண் -
விழி சிந்தும் ஒளியிலும்
இருப்பது நீ தானே...
இதழோரச் சிரிப்பிலே
இன்பமும் நீ தானே...!

Friday, April 1, 2016

நபி பெருமானாரின்


பல்லவி

நபி பெருமானாரின்
புகழினைப் பாட
வார்த்தைகள் ஏது
எல்லை கிடையாது

கருணையின் வடிவாய்
வையகம் சிறந்திட
இறையோன் தந்தானே
தூயவர் நபியை
நபி பெருமானின்

சரணம் 1

மடமைகள் கொளுத்தி
மலர்ச்சியை தந்தார் (2)
கடமைகள் மதித் - திடும்
மனிதராய் திகழ்ந்தார்

தொழுகையைப் பேணியே
தொழுகவென்று சொன்னார்
அழுகை  துஆவின்
ஆழம் என்று சொன்னார்
நபி பெருமானின்


சரணம் 2

ஏழைகளை மதித்தே
ஏற்க வேண்டும் என்றார் (2)
இறையோனை போற்றும் - வழி
வகையை சொன்னார்
                     
கனிவான மார்க்கமதை
கடைப்பிடிக்கச் செய்தார்
பணிவாக நடந்து
பார்புகழ வாழ்ந்தார்

வானம் விடிஞ்சிருச்சு

பல்லவி

வானம் விடிஞ்சிருச்சு
வாழ்க்க விடியலயே
தூரம் முடிஞ்சிருச்சி
துன்பம் முடியலயே

மரணத்தின் வாசலோ
மனக் கண்ணில் தோன்றுதே
வாழும் வழி தெரியாம
நாட்களும்தான் நீளுதே

சரணம் 1

யதார்த்தம் என்றொரு
மரண நிலை உள்ளதே
இதயச் சுமை அதிகரித்து
தினம் தினம் கொல்லுதே

தலைவிதி என்றொரு
வியப்புக்குறி உள்ளதே
விதி விலக்கு எதுவுமின்றி
உயிர் வலிக்க செய்யுதே


சரணம் 2

ராகங்கள் சுரம் மாறி
முகாரியாய் ஆகுதே
மேகங்கள் தீப்பிடித்து
சாம்பலாகிப் போகுதே

சோகங்கள் துரத்தியே
சோர்வினை காட்டுதே
வேகங்கள் குறைந்துயெம்
வேதனையை கூட்டுதே

என் வாழ்வின் வசந்தங்களே

பல்லவி

என் வாழ்வின் வசந்தங்களே
உன் உயிரே நீர் தானே
சிறப்பாக வளர்த்தெடுத்த
சிறு பயிரும் நான் தானே

கடல் போல நீர் இருந்தீர்
மழைத் துளியாய் நான் மலர்ந்தேன்
உடலுக்குள் கருவானேன்
உம்மாலே உருவானேன்

சரணம் 1

காற்று தந்த சுவாசத்தை
கற்றுத் தந்ததே கருவறை
போற்றுவேன் என் அன்னையே
ஆழமாய் என் உயிர் வரை

பசியோடு நான் காத்திருந்தால்
பாசமாக இலை விரிப்பீர்
ருசியென்று நான் மொழிந்தால்
மெதுவாக இதழ் சிரிப்பீர்



சரணம் 2

மகிழ்ச்சியாய் என் முகமிருந்தால்
மலந்திடும் உங்கள் பூ முகம்
துயரமாய் என் அகமிருந்தால்
துடித்திடும் என் தந்தை மனம்

கால் தடுக்கி நான் விழுந்தால்
கண்ணிலே வருமே நீர்த் துளி
காய்ச்சலாலே நான் படுத்தால்
கலங்கிடும்  உங்கள் இரு விழி

பூமான் நபி உலகை

       
பல்லவி

பூமான் நபி உலகை
புனிதமாக்க வந்தார்
ஈமான் நிலைத்திட
இஸ்லாத்தை தந்தார்

பாவம் யாவும் நீக்கி
பாரில் அமைதி காத்தார்
ஏகனாம் அல்லாஹ்வின்
ஏந்தல் நபியானார்


சரணம் 1

கதீஜாவை மணந்து
முன்மாதிரி ஆனார்; (2)
கைம்பெண்ணும் வாழ - ஒரு
நல் வழியை தந்தார்

ஜாலங்கள் புரிந்து வந்த
ஜாஹிலிய்யா கால
மனிதரை புனிதராக்கி
மனித நேயம் காத்தார்


சரணம் 2

சஹாபாக்கள் தனது
சந்நிதானம் நாடி (2)
மார்க்க உபதேசம் - கேட்டு
வாழ வழி செய்தார்

அபூபக்ர் உஸ்மானும்
உமரும் அலியும்
நல்லாட்சி செய்யவே
நபிகள் வழிகாட்டினார்

பால்நிலா பொழியும் நேரம்

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!

பெண்:-
ரகசியக் கனவுகளில்
ராகங்களை இசைக்கின்றாய்..
நீயே.. எனைக் கொல்கிறாய்!

நெஞ்சுக்குள் வருடுகிறாய்
நேசமாய் நெருடுகிறாய்
நீயே.. எனைத் தின்கிறாய்!

முழுவதாய் எனக்குள்ளே உதிரம் போல் நுழைந்தாயே
இனிமைதரும் மொழியாக இதயத்தில் கலந்தாயே

பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!

பெண்:-
உணர்வில் எல்லாம் தேன்துளி சிந்த
நெஞ்சில் விழுந்தாய்...
என் அணுவெங்கும் பூவின் வாசனை!

புயலாய் இருந்த எந்தன் மனமின்று
பூவின் இதழாய்..
இனி எனக்குள்ளே உன் நினைவு மோதி; செல்லுமே!

ஆண்:-
ஒரு மணிப்புறா போல நீ மயக்குற என்ன
உன் புன்(ன்ன்)னகை போதும்
நான் தொலஞ்சதும் கரஞ்சதும் உண்மயடி

பெண்:-
இதயத்தின் சிறைக்குள்ளே கைதிபோல் வந்தாயே
இனிமைகள் கலந்து நீ இம்சைகள் தந்தாயே

ஆண்:-
தூக்கத்திலும் ஏக்கத்திலும் நீயேதான் இருக்கிறாய்
தீ போல பனி போல மாறுகிறாய்!
அலைபோல கரை என்னில் சேருகிறாய்!

பெண்:-
குளிர்தரும் தென்றலாய் எனக்குள்ளே வந்தாயே
அருவிபோல் உள்ளுக்குள் சலசலன்னு நின்றாயே

பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்

Thursday, February 11, 2016

காதல் இதுதானா சொல் என் அன்பே

பல்லவி

பெண்
காதல் இது தானா சொல் என் அன்பே
மோதல் வந்தாலும் நீ விலகிச் செல்லாதே
சாரல் மழையாக வந்தாய் அன்பே
தூறல் பெய்து என் நெஞ்சை அள்ளாதே

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
காலைப் பனியாக நீயும் வந்தாய்
சூரியனையே நீ குளிரச் செய்தாயே
சேலை நிலவாக நீயும் வந்தாய்
வானத்தையே நீ உன் பக்கம் ஈர்த்தாயே

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

சரணம்

பெண்
கண்ணுக்குள் என்னை வைத்து காத்திரு
மண்ணுக்குள் வேரைப் போல சேர்ந்திரு
நீதானே என்றும் எந்தன் சங்கீதம்
நீயின்றி என்னவாகும் என் கீதம்

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
நீ என்னை நெஞ்சுக்குள்ளே சேர்த்திரு
தாயாகி சேயைப் போல பார்த்திரு
நீ சொல்லும் சொல்லே எந்தன் மந்திரம்
களவாட செய்தாய் என்ன தந்திரம்

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

Wednesday, February 10, 2016

உயிரை வதைத்துப் போடும் கல்லூரிப் பிரிவு

பல்லவி

உயிரை வதைத்து போடும்
கல்லூரிப் பிரிவு இது
துயரத்தை இசையாய் பாடும்
கொடிய கணங்கள் இது

துயரத்தில் எரிகிறோம்
ஏக்கத்தில் கரைகிறோம்
பிரிவதற்கு மனமின்றி
வாடுகின்றோம்

சரணம் 1

கூவும் குயிலின் ராகம்
இனிமையில்லை இனியும்
வாடினோம் பாடினோம்
தணியவில்லை துயரம்

விடைபெறப் போகும் இன்றைய நாளில்
ஒன்றாய் கூடுகிறோம்
இன்பங்கள் இனிமேல் இல்லை என்று
இதயம் வாடுகிறோம்

எங்கள் வானின் மேகமே
பிரியும் நேரம் சோகமே
கவலை தந்த காலமே
காலம் தந்த காயமே!


சரணம் 2

வரண்ட நிலத்தில் ஓர்நாள்
மழை வந்து போனால்
சிலிர்த்திடும் செடியெல்லாம்
நட்பும் மழை தானே!

மழைத்துளிபோல் இன்று சிதறும் கணமதில்
மனதுக்குள் பதறுகிறோம்
ஒன்றாய் நாமில்லை இனிமேல்
என்கின்றபோது துயரத்தில் கதறுகிறோம்

பிரிவு ஒரு பாரமே
பிரியும் நொடி கூறுமே
எங்கள் மனதின் ஓரமே
நட்பின் நினைவு நீளுமே!

எவன்டா எவன்டா

பல்லவி

எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா
எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா

துரத்தித் துரத்தி வாரேன்
தூக்கில் ஏத்தப் போறேன்
விரட்டி விரட்டி வாரேன்
விடாமல் கொல்ல போறேன்

எவன்டா
நான் எமன்டா!

சரணம் 1

பணத்தின் பின்னாலே மனிதா செல்கிறாய்
உனக்கு பணம் தான் எமன்
மதுவின் பின்னாலே மயக்கமாய் செல்கிறாய்
உனக்கு மதுதான் எமன்

கண்ணுல பொய் வச்சி சிரிக்கிறாய்
உனக்கு பொய்தான் எமன்
பெண்ணுல கண் வச்சி மோசமா திரியிறாய்
உனக்கு பெண்தான் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை ஆசை மீறினாலும் எமன்டா எமன்டா!


சரணம் 2

பொறாமை கொண்டு வாழும் மனிதா
உனக்கு குணம்தான் எமன்
உயிருக்கு விலை பேசும் மனிதா
உனக்கு கொலைதான் எமன்

துரோகத்தை பயமின்றி செய்கிறாய்
உனக்கு போலிதான் எமன்
அதிகாரம் கிடைத்தால் அடிமையாக்குறாய்
உனக்கு ஆணவம் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை நீதி தவறிடினும் எமன்டா எமன்டா!

நான் என்னத்த சொன்னேன்

பல்லவி

பெண்  
என் எண்ணத்த சொன்னேன்
 நீ என்னத்த நெனச்சே?
ஆண்  
உன் கன்னத்த பாத்து
அந்த வண்ணத்தில் தொலஞ்சேன்

சரணம் 1

பெண்  
வரைமுறை இன்றி வாலிபத்தின்
 வாசத்த காண்போமா?
ஆண்  
கலங்கர ஒளியா நாம் மாறி
காதல சேர்ப்போமா?

பெண்  
விடுமுறை என்பதே இல்லாம
 நானும் உன்ன நினைப்பேன்
ஆண்  
விடுதலை தந்திய இயலாம
விரும்பியே உன்ன அணைப்பேன்

சரணம் 2

ஆண்  
காற்றாய் நானும் உருமாறி
 உனக்குள் நுழைந்திடவா
பெண்  
பாட்டாக நான் எனை மாற்றி
உனக்குள் கலந்திடவா

ஆண்  
இலக்கியமாய் நீ நுழைந்தாயே
நான் இலக்கணம் ஆகிவிட்டேன்
பெண்  
தவமின்றி நீ கிடைத்தாயே நான்
தலைக்கனம் ஆகிவிட்டேன்

Sunday, January 17, 2016

சின்ன நிலவே சின்ன நிலவே

பல்லவி

சின்ன நிலவே சின்ன நிலவே
எந்தன் உயிரில் பூத்த மலரே
என்னை பார்த்து நீயும் சிரித்தாய்
எந்தன் உயிரில் பூக்கள் பறித்தாய்

நீதானே இன்று பிறந்தாய்
உன் சின்ன கண்கள் திறந்தாய்
மழைத்துளி போல் மனது
சிலிர்க்குதே இப்பொழுது
என்னுடனே நீயிருந்தால்
தினம் என்னுடனே நீயிருந்தால்

சரணம் 1

உன்னைக் காணும் வரை வாழ்வே இல்லை என்ற
ஏக்கத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்துக்கொண்டு சோகம் தீர்த்துக்கெண்டு
புதிதாக நான் பிறந்தேன்

தீயாய் நோக்குகின்ற தீயோர் பார்வைக்கெல்லாம்
முத்தாக நீ கிடைத்தாய்
பிள்ளைச் செல்வம் என்ற சொல்லின் அர்த்தத்துக்கு
சொத்தாக நீ கிடைத்தாய்

மண்ணில் இன்று நானே தலை நிமிர்ந்து போக
காரணம் நீயல்லவா
கண்ணில் தோன்றும் எந்தன் சந்தோசங்களுக்கு
தோரணம் நீயல்லவா

துன்பங்கள் தீருமே இன்பங்கள் கூடுமே
என்னுடனே நீயிருந்தால் தினம்
என்னுடனே நீயிருந்தால்

சரணம் 2

பூவைப் போன்ற உன்னை சேயாய் பெற்றதற்கு
என்ன தவம் நான் புரிந்தேன்
உன் பிஞ்சு பாதம் நெஞ்சில் வந்து மோதும் போது
சுவர்க்கத்தை நான் அறிந்தேன்

உன் பார்வை ஓர் நிமிடம் பாவை என் மனதில்
பால் வார்க்கம் சுகம் உணர்ந்தேன்
பெண்ணாய் மண்ணின் மீது நானும் பிறந்ததற்கு
அர்த்தம் நீ என்றறிந்தேன்

சின்னக் கைகள் ஆட்டி நீ சிரிப்புதிர்க்கும் வேளை
மொத்தமாக நான் தொலைந்தேன்
வண்ண கன்னம் பார்த்து முத்தமிட்டுக்கொண்டே
என் நாட்கள் நான் தொடர்வேன்

துன்பங்கள் தீருமே இன்பங்கள் கூடுமே
என்னுடனே நீயிருந்தால் தினம்
என்னுடனே நீயிருந்தால்

தலைவன்னா யாருடா

பல்லவி

தலைவன்னா யாருடா
தப்பு பண்ணாத ஆளடா
இவன் எங்க சொத்துடா
கைவிரலு பத்துடா ஆ.

சிங்கத்த கண்டது யாருடா
இவன வந்து பாருடா..
பண்றது எல்லாம் வித்த டா
எங்களோட சொத்துடா..

சரணம் 1

ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா
அவன் ரெண்டு கண்ணும் மின்னும்டா
ரெண்டும் ரெண்டும் நாலுடா
இவன் ஆகாயம் போன்ற ஆளுடா..

சூரியன் நமக்கு தூரம்டா
இந்த சூரன் நமக்கு வீரன்டா
மனிதம் மதிக்கும் யாவரையும்
மறவா கருணைக் காரன்டா

சரணம் 2

நாலும் ரெண்டும் ஆறுடா
இவன் கனிவில் காயம்; ஆறும்டா
எட்டும் ரெண்டும் பத்துடா
இவன் கோபத்தில் தண்ணீர் பத்தும்டா

கரு கொண்ட உயிரடா
துயில்வது பத்து மாதம்டா
இவன் சொல்லும் ஒரு வரியில்
தோன்றுமே பத்து வேதம்டா