Friday, July 29, 2016

நீயும் நானும் சேரும் காலம்

பல்லவி

பெண்
நீயும் நானும் சேரும் காலம்
மேலும் மேலும் இன்பமாகும்
மாசம் வருசமென்று உன்கூட
வாழத் தோணும்

ஆண்
விழி மேகங்கள்
காதல் நீரை பொழிகிறதா
சிறு பார்வைகள்
ஊசி போல நுழைகிறதா

இருவர்
இதயத்தில் காதல் கிளிகள்
கொஞ்சிப் பேசி மகிழ்கிறதா

சரணம் 1

ஆண்
காதல் தூண்டில் போட்டவளே
நானும் சிறு மீனா
லட்சம் இன்பம் தந்தவளே
நீயும் வரம் தானா



பெண்
மனதை சுற்றிப் பாக்குறியே
நானும் மலர்த் தேனா
வெட்கம் தின்னப் பாக்கிறதே
அருகே வர வேணா


சரணம் 2

பெண்
காதல் நோயில் ஆசைப்பட்டு
நானும் வீழ்ந்ததேனோ
வலிகள் கூட இன்பமாகும்
காதல் வந்தால் தானோ

ஆண்
பார்வை தனை என் கிழக்கில்
வீசிப் போனதேனோ
கருவிழியால் மௌன மொழி
பேசிப் போனதேனோ

No comments:

Post a Comment