Sunday, June 11, 2017

தனியாக நானிங்கே

பல்லவி

தாய்
தனியாக நானிங்கே
தவிக்கிறேன் நீயேங்கே
இன்பங்கள் புகையாகி
இல்லாமல் போனதெங்கே


சரணம் 1

தந்தை
நான் போட்ட கோலங்கள்
வெறும் கோடாய் ஆனதம்மா
நான் வாங்கிய சுவாசங்கள்
விஷம் வாங்கிப் போனதம்மா

தாய்
என் வயித்தில் வளந்தகொடி
என் பேச்சை மீறுதம்மா
ஒளித் தீபம் வீறுகொண்டு
காட்டுத் தீ ஆகுதம்மா

புதிதாகவிதிமாறி
என் மனதை வாட்டுதம்மா

சரணம் 2

மகள்
புயல் காற்று வீசுகையில்
புக்கள் மேல் பாசமம்மா
கோடையில் வாடுகையில்
தண்ணீரைத் தேடுதம்மா

உருமாறிய என் காதல்
உலைநீராய் கொதிக்குதம்மா
தாமரைமேல் நீர் போல
என் வாழ்வும் ஆனதம்மா

வாழ்க்கையின் தத்துவத்தை
வாழ்வெனக்கு சொன்னதம்மா

No comments:

Post a Comment