Friday, October 24, 2014

வாலிபத் தென்றலாய் வந்து

பல்லவி

வாலிபத் தென்றலாய் வந்து
வசியம் செய்தவனே..
மனதை பறித்துப்போட்டு
மகிழ்ச்சி தந்தவனே..

உணர்வுகளில் புகுந்து
உறக்கம் தின்றவளே..
முத்தங்கள் தந்து என்
மூச்சைக் கொன்றவளே..


சரணம் 1

என் மன ஓசையை
மொழிபெயர்த்துப் பார்த்தாயா?
கண்களின் பாசையை
கவிதைகளில் சேர்த்தாயா?

தனியான நேரத்தில்
எனை எண்ணிப் பார்த்தாயா?
கனவில் நான் வந்ததால்
உடலெல்லாம் வேர்த்தாயா?


சரணம் 2

உயிருக்குள் உறவாடி
உள்ளத்தை கொய்தவனே..
மாந்தோப்பின் தூறலாய்
மனசெல்லாம் பெய்தவனே..

காதலின் அழகெல்லாம்
கலர்கலராய் தந்தவளே
புன்னகையின்; மொழியினை
பூக்களுக்கே சொன்னவளே..

No comments:

Post a Comment