பல்லவி
வாலிபத் தென்றலாய் வந்து
வசியம் செய்தவனே..
மனதை பறித்துப்போட்டு
மகிழ்ச்சி தந்தவனே..
உணர்வுகளில் புகுந்து
உறக்கம் தின்றவளே..
முத்தங்கள் தந்து என்
மூச்சைக் கொன்றவளே..
சரணம் 1
என் மன ஓசையை
மொழிபெயர்த்துப் பார்த்தாயா?
கண்களின் பாசையை
கவிதைகளில் சேர்த்தாயா?
தனியான நேரத்தில்
எனை எண்ணிப் பார்த்தாயா?
கனவில் நான் வந்ததால்
உடலெல்லாம் வேர்த்தாயா?
சரணம் 2
உயிருக்குள் உறவாடி
உள்ளத்தை கொய்தவனே..
மாந்தோப்பின் தூறலாய்
மனசெல்லாம் பெய்தவனே..
காதலின் அழகெல்லாம்
கலர்கலராய் தந்தவளே
புன்னகையின்; மொழியினை
பூக்களுக்கே சொன்னவளே..
வாலிபத் தென்றலாய் வந்து
வசியம் செய்தவனே..
மனதை பறித்துப்போட்டு
மகிழ்ச்சி தந்தவனே..
உணர்வுகளில் புகுந்து
உறக்கம் தின்றவளே..
முத்தங்கள் தந்து என்
மூச்சைக் கொன்றவளே..
சரணம் 1
என் மன ஓசையை
மொழிபெயர்த்துப் பார்த்தாயா?
கண்களின் பாசையை
கவிதைகளில் சேர்த்தாயா?
தனியான நேரத்தில்
எனை எண்ணிப் பார்த்தாயா?
கனவில் நான் வந்ததால்
உடலெல்லாம் வேர்த்தாயா?
சரணம் 2
உயிருக்குள் உறவாடி
உள்ளத்தை கொய்தவனே..
மாந்தோப்பின் தூறலாய்
மனசெல்லாம் பெய்தவனே..
காதலின் அழகெல்லாம்
கலர்கலராய் தந்தவளே
புன்னகையின்; மொழியினை
பூக்களுக்கே சொன்னவளே..
No comments:
Post a Comment