Wednesday, October 29, 2014

நிம்மதியான இந்த நிமிடங்களை

பல்லவி

நிம்மதியான இந்த நிமிடங்களை
நித்தமும் எனக்குத் தருவாயா?
நிலவொளி வீச என் வானில்
நிஜமாய் தினமும் வருவாயா?



சரணம் 1

பெண்

ஆண் புயலாக அருகில் வருகிறாய்
தேன் துளிபோல சிரிக்கிறாய்
பாடலைப் போல மனதில் பதிகிறாய்
ராகங்கள் எனக்குள் இசைக்கிறாய்

நட்சத்திரமாய் இரவினில் வந்து
நித்திரை எல்லாம் திருடுகிறாய்
நாளிகை முழுதும் என்னுடனிருந்து
தென்றல் காற்றாய் வருடுகிறாய்




சரணம் 2

ஆண்

இப்படி நானே இருந்ததே இல்லை
இயல்பை எல்லாம் மாற்றினாய்
எப்படி நுழைந்து உள்ளத்துக்குள்
இன்பத் தேனை ஊற்றினாய்?

நெடுநாள் தொடர்ந்த கவலை எல்லாம்
நெருப்பாய் மாற்றி அணைத்தாயே
எனக்கென பூத்த அன்புச் செடியே
என்னை உனக்கள் இணைத்தாயே

No comments:

Post a Comment