Friday, October 24, 2014

கிளை விரித்த உன் நெஞ்சில்

பல்லவி

கிளை விரித்த உன் நெஞ்சில்
கிளி போல நானிருப்பேன்

மலைத் தேனைப் போல் உந்தன்
மனசுக்குள் இனித்திடுவேன்


சரணம் 1

ஒத்தை பன மரம்போல
ஒதுங்கியே நான் நிக்கையிலே
வித்தை போல நெஞ்சுக்குள்
விருப்பமாக நுழைந்தாயே

 உச்சி முதல் பாதம் வரை
உன் நெனப்பில் மிதக்கையிலே
 நச்சி வச்ச இஞ்சியப் போல்
 நறுமணத்தை தந்தாயே


சரணம் 2

உன் விழிக்குள் மீன் போல
உலவிய படி இருப்பேனே
கண் விழிக்கும் நேரத்திலும்
கவிதைகள் படிப்பேனே

நீ தின்ற கரும்பையும்
நிஜமாகவே ருசிப்பேனே
ஏன் இந்த அவஸ்தை என
எனை எண்ணியே சிரிப்பேனே!

No comments:

Post a Comment