Sunday, October 26, 2014

வாழ வைப்பது எங்களை

பல்லவி

வாழ வைப்பது எங்களை
என்ன என்று சொல்லுங்க
தெரியலன்னா கொஞ்சம் ஒதுங்கி
அங்கே போயி நில்லுங்க



சரணம் 1

பால் வாசம் மாறாத பச்சக் கொழந்த
பண வாசம் உணர்ந்துகிட்டு எழும்பிடுதுங்க..
பாடம் படிக்க போகின்ற சின்னதுங்களும்
பணத்த கேட்டு அடம் புடிச்சி அழுவுதுங்க..

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?



சரணம் 2

ஊருக்காரன் உறவுக்காரன் ஒன்னா வருவான்
ஊட்டுக்குள்ளே படுத்துகிடந்து உசுர எடுப்பான்
மாற்றுக்காசு வாங்றதுக்கே வழியில்லாதப்ப
வேறு தேவை பலதை சொல்லி கரச்சல் கொடுப்பான்

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?

No comments:

Post a Comment