Monday, November 21, 2016

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல

ஆண்

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல
சறுக்கி விழுந்து போனே இந்த ஆம்பள

போத தரும் கள்ளுப் பான நீயடி
இன்னக்கி கோப்பட்டு நிக்கிறியே  ஏனடி

வெண்டிக்காயி வெரலு நானும் தொட்டாச்சி
அதப் பாத்துபுட்டு  வெடிவெடிக்கிது பட்டாசு

ஆள வெட்டும் பாக்குவெட்டி நீயடி அதில
மாட்டிக்கிட்ட பாக்கு இங்க நானடி

போதையிலும் உன்ன தானே தேடுறேன்
நீ இல்லேனாக்கா சாவக்கூட தோணுதே

ஒதட்டுல நீ சாயம் பூசி போறியா
இல்ல உதட்டு மேல மாயம் பூசி போறியா

காதுல நீ ஜிமிக்கி மாட்டிப் போறியா
இல்ல எனக்கு மட்டும் டிமிக்கி காட்டிப் போறியா

உரிச்சி வச்ச தோடம் பழம் நீயடி
இப்போ பழிப்பு காட்டி போறதென்ன ஞாயம்டி

பச்சோந்தியாயா இருப்பவளே கேளுடி
நீ கண்ணுக்குள் வச்சிருக்க வேலுடி

நீ பார்த்துபுட்டா ஏறுதுங்க கிக்கு டி
என்ன கொன்னுப்புட்டு போறதா ஒன் திட்டம் டி

நெஞ்சுக்குள் நெருப்ப ஏன்டி மூட்டுற
அதில் சிரிச்சு சிரிச்சு பெற்றோலத்தான் ஊத்துற

சாம்பலாக ஆகிட்டேன் நானும்தான்
அதையே ரசிச்படி போறியே நீயும்தான்

உன் சொந்தக்காரி யாரு பத்ர காளியா
உன் பேச்செல்லாமே இருக்குதடி போலியா

துண்டுதுண்ணா நானும் ஒடஞ்சி போறேனே
கண்ணும் நெஞ்சும் கலங்கி கலங்கி வாடுறேன்

ஏடிஎம் ஆ என்ன தானே தேடுற ஏன்டி
காச்சில்லன்னா கழட்டி விடப் பாக்குற

கொரங்கு புத்தி நீயுமாடி காட்டுற
உன்னய நிறுத்தனுன்டி தண்ணியில்லா காட்டுல

பேயுமில்ல பிசாசுமில்ல இங்கடா
இது ரெண்டு சேந்த படைப்புதான் பொண்ணுடா


பெண்

பொண்ணுங்கள எக்குத்தப்பா நெனக்கறியே
ஆனா பெண்ணில்லனா வாழ்க்கல்லன்னு பொலம்புரியே

டைம்பாஸூக்கு பொண்ணுங்கள தேடுறியே
ஆனா டைம்போம் என்று பொண்ணுங்கள பழிக்கிறியே

ரோசா என்று சொல்லித்தானே மயக்குறியே
ஆனா காச மட்டும் செலவழிக்க தயங்குறியே

நாயப் போல சுத்தி சுத்தி நிக்கிறியே
ஆனா நாய விட கேவலமா நெனக்கிறியே

கொரங்கு போல மனசு மனசு தாவுறியே
ஆனா உத்தமனா ஊருக்கு நீ காட்டுறியே

வேலி தாண்ட நேரம் எது பாக்குறியே
ஆனா தாலியத்தான் கேட்டுப்புட்டா நழுவுறியே

செல்லம்கொஞ்சி சாதிக்கத்தான் பாக்குறியே ஆனா
ஷசெல்|லக்கூட தருவதற்கு மறுக்குறியே

சந்தேகந்தான் புடிச்சிக்கிட்டு பாக்குறியே
சந்தோசத்த ரெண்டு துண்டா ஒடக்கிறியே

அப்பன நீ தப்புத் தப்பா பேசுறியே
தப்பெதுவும் செய்யாதபோல நிக்கிறியே

Tuesday, November 1, 2016

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே

பல்லவி

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே
தீ புடிச்சு எரியுதே
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் ரத்தம் வழியுதே

அனு பல்லவி

கனிமொழியே கனிமொழியே
கண்ணெதிரே உன்னை நான் தொலைத்தேன்
என் விழியே என் விழியே
என் விரல் கொண்டு உன்னை நான் துளைத்தேன்


சரணம் 1

நான் வளர்த்த காதல் செடியோ
திசைகள் மாறி பூத்ததென்ன
உயிர்துளியான எந்தன் காதல்
உருமாறியே போனதென்ன

மாயத் திரையோ மேலே எழுந்து
மனதின் திரையை மறைத்ததென்ன
மயிலிறகு கொண்டு வருடி வருடி
மனப் பாறையும் கரைந்ததென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

சரணம் 2

வானவில்லை கண்ட பெண்மை
வானம் என்னை மறந்ததென்ன
வளைந்தோடிய நதிகள் எல்லாம்
வழிகள் மாறி போனதென்ன

விண்மீன் அழகில் மாட்டிக்கொண்டு
நிலவின் ஒளியை மறுத்ததென்ன
கானல் நீரில் கனவினைத் தொலைத்து
கண்களை கண்களை மறுப்பதென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்

பல்லவி

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்
பாசம், காதல் இருக்காதே
உனக்கும் புதிதாய் எதிரிகள் முளைத்தால்
சிகரம் தொடுவாய் மறக்காதே

சரணம் 1

கண்களில் விழுந்திடும் தூசியைக் கண்டு
அழுதல் என்பது ஞாயமில்லை
சூரியன் தலையின் உன் பேரெழுதிடு
உனக்கந்தச் சூரியன் தத்துப்பிள்ளை

தோல்விகள் கண்டு துவண்டிருப்பதற்கு
உனக்கென்று பிறிதொரு நேரமில்லை
நெஞ்சுக்குள் ஆழமாய் நம்பிக்கை விதைப்பாய்
வெற்றிகள் உனக்கு தூரமில்லை

சரணம் 2

கேலிகள் செய்வார் கோள்களைச் சொல்வார்
எதையும் எண்ணி நீ வருந்தாதே
பலமுறை சொல்லியும் திருந்தா கூட்டம்
இனி ஒருபொழுதும் திருந்தாதே

பாறைக்குள் இருக்கும் செடிகள் எல்லாம்
முட்டி முளைத்திடும் துணிவோடு
வாழப் பயந்து நீ இருக்காமல்
வாழப் பழகிட துணிந்தோடு

பௌர்ணமி போலெந்தன்


பல்லவி
ஆண்
பௌர்ணமி போலெந்தன்
பருவத்தில்  வந்தவளே
மௌனத்தால் பேசி என்
மனதுக்குள் வாழ்ந்தவளே

பெண்
வீணையாய் மாறி என்
இளமையை மீட்டியவனே
காதல் இதயத்தில்
வர்ணங்கள் தீட்டியவனே

சரணம்

பெண்
இப்படி இப்படி தான்
காதலே பிறக்குதா?
காதல் வந்த பின்
உலகமே மறக்குதா?

ஆண்
உனக்கும் என்னைப்போல் – பல
சிறகுகள் முளைக்குதா..
கைகோர்த்து நடந்திட அடி
ஆசையும் அழைக்குதா?

பெண்
என் பெயரை நீ சொல்லிடும்போது
புதிதாய் நான் பிறந்தேன்


சரணம் 2

ஆண்
துளி புன்னகை புரிகையில் - அடி
தென்றல்தான் மோதுதா
இனியவள் உன்னைத்தான்  - என்
இதழ்களும் தேடுதா?

பெண்
உன் மனம் உன்னிடம் - வந்து
முகவரி கேட்குதா
இரவுகள் இரவுகள் உன்னை
எண்ணியே நீளுதா?

ஆண்
உன்னை நான் கண்டுபிடித்தேன்
என்னை நான் தொலைத்தேன்!!!

பாடலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

நான் தந்த மடலினை

பல்லவி

நான் தந்த மடலினை
நடுவீதியில் எறிந்தவளே
நான் தந்த மனசை
என்ன செய்யப் போகிறாய்?

எனக்குள் தீ கடலினை
பொங்கியெழச் செய்தவளே
உனக்காக வாழும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?

சரணம் 1

பாசத்தைப் புரிவதில்
அசட்டையாக இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் மட்டும்
அட்டையாக இருக்கிறாய்

தூக்கத்தை கெடுப்பதில்
ராட்சசியாய் இருக்கிறாய்
துக்கத்தை மட்டும்
குறைச்சலின்றி தருகிறாய்


சிட்டாக சிறகடித்து
வெட்டென மறைகிறாய்!

சரணம் 2

எல்லாமே மறந்திருந்தால்
என் முன்னே வருகிறாய்
உன்னை நாடி நான் வந்தால்
உடனடியாய் மறைகிறாய்

விடை தெரியா வினாவாக
எனக்குள்ளே எழுகிறாய்
அணை கடந்த வெள்ளம்போல்
உயிருக்குள் விழுகிறாய்

சட்டென்று என்னைப் பார்த்து
மொட்டென மலர்கிறாய்!

வெண்மதியே வெண்மதியே

பல்லவி

பெண்
வெண்மதியே வெண்மதியே
ஒருமுறை என்னைப் பாராய்
உன் முகம் காண ஆவல்கொண்டேன்
அனுதினம் என்னிடம் வாராய்

அனு பல்லவி

பெண்
ஒற்றைப் பூவின் காதல் இது
என்றும் என்றும் தீராதது
நாணம் வந்து தாலாட்டுது
கேளாய்


சரணம் 1

ஆண்
பகலவன் விழித்து காலையில்
பவனி வர முதல்
வேண்டும் வேண்டும் அல்லிப் பூவே
உன் இதழ்

பெண்
நமது காதலின் சாட்சிகளோ
அந்த கரு முகில்
புயலும் தோற்கும் எங்கள்
காதலின் உறுதியில்

ஆண்
ஒருமுறை தீண்டு
உயிர் கொஞ்சம் கூடும்
மறுமுறை தீண்டு
மரித்திட தோணும்

சரணம் 2

பெண்
மழையின் சாரல் உந்தன்
பாசம் அறியலையோ
குளிரும் தென்றல் உந்தன்
காதல் உணரலையோ

ஆண்
வெள்ளி விண்மீன் உந்தன்
கருவிழி காணலையோ
துள்ளி ஓடும் நதிகள்
உன் இடை பார்க்கலியோ

பெண்
இரு விழி பாரு
இதயத்தைக் கூறும்
உயிர் வரை பாரு
காதலின்னும் கூடும்  

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே

பல்லவி

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே
மலர்ச் செண்டு விழிகளில் பாம்புகள் நெளியுதே
உயிரோடு கொன்றவளின் நினைவுகள் தெறிக்குதே
கைகோர்த்த காலங்கள் நெருப்பாக எரிக்குதே

இது இது இது
காதலின் துரோகம் என்பதா
நரம்பினில் ஓடுவதெல்லாம் நஞ்சென்பதா?


சரணம் 1

மணற் பரப்பினில் மங்கை மடியினில்
மனசெல்லாம் மலர் பூத்ததே
இன்று எண்ணியெண்ணி அதை அழித்திடும்
காலங்கள் எனக்கானதே

உயிர் திருகிடும் உயிர் திருகிடும்
காலங்கள் ரொம்ப கனிவானதே
இன்று கனிவெல்லாம் வற்றி உருமாறி
காயங்கள் எனக்கானதே


சரணம் 2

நான் அழுதிடும் நொடி எழுதிடும்
வரி எல்லாம் உனக்கானதே
எண்ணி துடித்திடும் மனம் வெடித்திடும்
வலியெல்லாம் எனக்கானதே

பொழுதெல்லாம் பின் இரவெல்லாம்
பறவைகள் சுகம் காணுதே
இடையிடை அதை காணும் மனம் மெல்ல
ஒரு மெழுகானதே சுமை கூடுதே