Monday, November 3, 2014

மருந்தெல்லாம் இனிக்குதடி

பல்லவி

மருந்தெல்லாம் இனிக்குதடி
மாம்பழமோ கசக்குதடி
நேராக நடக்கையிலும்
நெஞ்செல்லாம் பதறுதடி

குளிரிலும் தினம் குளிக்கிறேன்டி
இருமுறை பல் துலக்குறேன்டி
மாருதமே உனைப் பார்க்க
மல்லிகையாய் இருக்கிறேன்டி



சரணம் 1

மாதுளங்காய் பல்லழகே
மயக்கிடும் உன் சொல் அழகே
நெஞ்சோடு; சாஞ்சிருடி
எழுதித் தரேன் இவ்வுலகை

பச்சத் தண்ணியப் போல்
என்னையே நீ பருகேன்
மச்சானே உனக்காக
மருதங்கிளி நானிருக்கேன்


சரணம் 2

வாசமான புகையிலையே
சரசமிடும் பூங்குயிலே
வெடக்கோழி; நான் வாரேன்
வேறெங்கும் நான் போகேன்

நல்லா தான் சொல்லுறடா
பேச்சாலே கொல்லுறேடா
இன்னும் நான் இருந்தாக்கா
இம்சைதான் பண்ணுவடா

No comments:

Post a Comment