Monday, November 3, 2014

இந்த தேசம் நம் தேசம்

பல்லவி

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்



சரணம் 1

முப்பதாண்டு போர்க் காலம்
முடிவில் எதனைத் தந்தது
எதிர்கால கனவு கலைத்து
பெரிய சேதம் தந்தது

உயிர்களின் மதிப்பு இன்னதென
உணர்வோமே பேதமின்றி
தீக் குணங்கள் அழியட்டும்
இனி மிச்ச மீதமின்றி



சரணம் 2

குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது

ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்

No comments:

Post a Comment