Monday, November 3, 2014

பொல்லாத காதல் என்னை

பல்லவி

பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்

ஒரு கல் போலவே என் தலைமீதிலே
அது பாரங்கள் தந்து என்னை வதைக்கிறதே


சரணம் 1

பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்
நாளெல்லாம் நினைவில் வந்து
துயர் வாரிக் கொல்லும்

நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்


சரணம் 2

காரணம் இன்றி காதலை கொன்ற
கண்மணி நீயும் எங்கே
உனைத் தேடி நாட்கள் எல்லாம்
அலைந்தேனே இங்கே
பசி தாகம் பிணியைக் கூட
மறந்தேனே அன்பே

வெண்ணீரை ஊற்றும் வலிகள்
காட்டிட வேண்டாம்
கண்ணீரைப் பரிசாய் நீயும்
கேட்டிட வேண்டாம்

No comments:

Post a Comment