Sunday, June 11, 2017

அன்பே அன்பே கேட்கிறதா உயிர் உருகிடும் சத்தம்

பல்லவி

பெண்
அன்பே அன்பே கேட்கிறதா உயிர் உருகிடும் சத்தம்
என்னை எண்ண ி வாடுகிறேன் மனமுடையுதே நித்தம்
நெஞ்சோடு சேர்த்து வச்சேனே உன்னை
இனி என் கண்ணீர் ஈரமாக்குமே மண்ணை

சரணம் 1
ஆண்
கண்வழி நுழைந்து படித்துப் பார்க்கையில்
உயிலென எழுதித் தந்தாய் உயிரை
இன்று வந்து நீ அழித்துப் போகையில்
இதயத்தை பிழியுதடி கவலை

பெண்
தேள் கொட்டும் கனவுகள் தேடி வருகையில்
தெய்வங்கள் என்னை பார்க்கவில்லை
ஆளான பொண்ணு நான் அடிமையாகிடும்
விதியினை வெல்லும் வழி இல்லை


சரணம் 2

ஆண்
கைகோர்த்து நாங்கள் நடந்த கடற்கரை
இனிமேல் உன்னை கேட்கும்போது
என்னைப் பிரிந்துநீ சென்ற வலியினை
சொல்லவதற்கு வார்த்தைகளே இல்லை

பெண்
செடியில் பூத்தபூ செடியைப் பிரிகையில்
என்றைக்குமே கண்ணீர் கொள்வதில்லை
உன்னை பிரிந்து நான் சென்றபோதிலும்
எந்தன் காதல் என்றும் அழிவதில்லை

No comments:

Post a Comment