பல்லவி
வானவில் எனக்கோர் அழகு ஓவியம்
உன்னை காணாமல்
வானமே இடிந்து போய்விடும்
தேவதையின் மொழி எங்கே
தேன் சிந்தும் விழி எங்கே
தலை சாய்ந்திருக்க உன் தோள் எங்கே?
பாசம் ஊட்டும் விரல் எங்கே
நேசம் வீசும் குரல் எங்கே
எனக்கே எனை அறிவித்த நீ எங்கே?;
காலம் நம்மை பிரித்தது
பிரிவோ என்னை எரித்தது
சரணம் 1
சின்ன வயதில் மின்மினி போல
பறந்து திரிந்த வயல் மேடு
இன்று உன்னை எங்கே என்று கேட்கிறதே
வண்ண மயிலின் தோகை போல
விரித்துப் போட்ட உன் கூந்தல்
இரவை எல்லாம் விலைக்கு வாங்கப் பார்க்கிறதே
ஆனா ஆவன்னா சொன்ன காலம்தான்
ஆனா இன்னும் தான் மாறலயே.. ஏஏஏ
சரணம் 2
அன்னம் தண்ணி இல்லாமல்
விண்ணும் மண்ணும் புரியாமல்
நினைவு மட்டும் எரிமலையாகிப் போகிறதே
கன்னம் கிள்ளி நீ சொன்ன
கனிவுச் சொற்கள் எல்லாமே
நெஞ்சுக்குள்ளே சிற்பங்கள் ஆகிறதே
நானோர் ஏழையே நீயும் இல்லையே
எங்கே நீ சென்றாய் என் சிநேகிதியே.. ஏஏஏ