Wednesday, May 4, 2016

இரு விழி என்ன இலக்கியமா

பல்லவி

ஆண்
இரு விழி என்ன இலக்கியமா
இதழ்கள் இரண்டும் லேகியமா
இதயத்தில் நான் சௌக்கியமா
சௌக்கியமா

பெண்
கருவிழி மயக்கிடும் காந்தமா
காணணும் நான் நாளாந்தமா
கண்கள் என்னுயிர் ஏந்துமா
ஏந்துமா

சரணம் 1

ஆண்
பகலிரவாய் கொல்லுரியே
பாசக்கார பூவே பூவே
உன்னத் தின்ன வந்திடுவேன்
ரோசக்காரன் நானே நானே

பெண்
அக்கம் பக்கம் யாருமில்ல
வேணாம் போ மாமா
வெக்கம் பிச்சுத் தின்னுதென்னை
ஆமா  அட ஆமா


ஆண்
அடியே இளஞ்செடியே
நீ பூக்களின் தோழியா
புயலாய் மாறுவியா?



சரணம் 2


ஆண்
ஒத்தையடி பாதையிலே
வாரேன் தனியே தனியே
ஒத்துக்கடி அத்தப் பொண்ணே
போவோம் நாம் தனியே

பெண்
அணைச்சாலும் சத்தமில்ல
திருடா ஏய் திருடா - இது
தாலி தந்தா குத்தமில்ல
பொறுடா அட பொறுடா

ஆண்
நினைவில் என் கனவில்
நீ தினம் தினம் வருவாயா?
இதயம் தருவாயா?