Wednesday, January 15, 2014

ஆண் என்றால் என்ன

பல்லவி

ஆண் என்றால் என்ன
பெண் என்றால் என்ன
தொழிலொன்று கிடைக்கும் வரை
தயக்கங்கள் தீராது

படிப்பு உண்டு கையிலே
துணிவு உண்டு நெஞ்சிலே
பார் போற்ற போராடு
பசி தாகம் பாராது

சரணம் 1

பணமிருந்தால் பையினிலே
பயமில்லை வாழ்க்கையிலே
குணம் மட்டும் இருந்தாலோ
அது என்றும் குப்பையிலே

சொந்தக் காலில் நிற்பதற்கு
சொந்தங்கள் தேவையில்லை
முயற்சியினால் முன்னேறு
தூண்டுகோல் வேறு இல்லை

சரணம் 2

நல்ல காலம் வருமென்றால்
தானாக வந்திடாது
நம்பிக்கை விதை போட்டு
வாழ வேண்டும் துணிவோடு

உனை நம்பும் சொந்தங்கள்
உலகினிலே சிறப்பாக
தோள் நிமிர்ந்து வாழ்வதற்கு
தொழில் பெற்று முன்னேறு!

No comments:

Post a Comment