பல்லவி
விருப்பங்கள் இல்லையெனில்
விதி வென்று விடுமா?
விரும்பிய வாழ்க்கையினை
அது கொன்று விடுமா?
சரணம் 1
ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆரம்பம் திருமண ஊற்று
வாழும் காலம் முடியும் வரை
வருடணும் வசந்த காற்று
உயிர் இரண்டும் இணையனும்
உண்மை அன்பை ஏற்று
மனதுக்குள் வளரணும்
நம்பிக்கை எனும் நாற்று
சரணம் 2
நடப்பதென்ன நாளுமிங்கே
நடைபழக்கும் விளையாட்டு
இஷ்டம்தான் இல்லையென்றாலும்
கஷ்டம் தருகிற கூத்து
காதலினை மறக்கச் சொல்லும்
காதல் புரிந்தவர் கூற்று
ஆதலினால் மாறிவிட்டேன்
அன்னை தெரேசாவை ஏற்று!!
விருப்பங்கள் இல்லையெனில்
விதி வென்று விடுமா?
விரும்பிய வாழ்க்கையினை
அது கொன்று விடுமா?
சரணம் 1
ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆரம்பம் திருமண ஊற்று
வாழும் காலம் முடியும் வரை
வருடணும் வசந்த காற்று
உயிர் இரண்டும் இணையனும்
உண்மை அன்பை ஏற்று
மனதுக்குள் வளரணும்
நம்பிக்கை எனும் நாற்று
சரணம் 2
நடப்பதென்ன நாளுமிங்கே
நடைபழக்கும் விளையாட்டு
இஷ்டம்தான் இல்லையென்றாலும்
கஷ்டம் தருகிற கூத்து
காதலினை மறக்கச் சொல்லும்
காதல் புரிந்தவர் கூற்று
ஆதலினால் மாறிவிட்டேன்
அன்னை தெரேசாவை ஏற்று!!
No comments:
Post a Comment