Wednesday, January 15, 2014

விருப்பங்கள் இல்லையெனில்

பல்லவி

விருப்பங்கள் இல்லையெனில்
விதி வென்று விடுமா?
விரும்பிய வாழ்க்கையினை
அது கொன்று விடுமா?

சரணம் 1

ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆரம்பம் திருமண ஊற்று
வாழும் காலம் முடியும் வரை
வருடணும் வசந்த காற்று

உயிர் இரண்டும் இணையனும்
உண்மை அன்பை ஏற்று
மனதுக்குள் வளரணும்
நம்பிக்கை எனும் நாற்று

சரணம் 2

நடப்பதென்ன நாளுமிங்கே
நடைபழக்கும் விளையாட்டு
இஷ்டம்தான் இல்லையென்றாலும்
கஷ்டம் தருகிற கூத்து

காதலினை மறக்கச் சொல்லும்
காதல் புரிந்தவர் கூற்று
ஆதலினால் மாறிவிட்டேன்
அன்னை தெரேசாவை ஏற்று!!

No comments:

Post a Comment