Wednesday, January 15, 2014

மாங்குருவி

பல்லவி

மாங்குருவி போல் வந்து
மார்பில் கூடு செய்தவளே
பூ அருவி சலசலப்பாய்
பூங்காற்றை தந்தவளே

விண்மீனை திருடிக்கொண்டு
விண்ணிடமே மறைத்தவனே
பெண் பூவை திருடிடவே
சம்மதங்கள் கேட்டவனே

சரணம் 1

காதோரம் உன் சிணுங்கள்
கவிதைகள் பலதை படித்துத் தரும்
அந்நேரம் என் இதயம்
ஆயிரம் தடைவை துடித்து விடும்

கண் ரெண்டில் ஓவியமாய்
கண்ணா உந்தன் சிரிப்பிருக்கு
மண் மீது நான் பிறந்தேன்
அதிலும் ஏதோ சிறப்பிருக்கு

            (மாங்குருவி)

சரணம் 1

விழி ரெண்டில் உனை இருத்த
விழிகள் உன்னை படம் பிடிக்கும்
எந்நாளும் உனைக் காண
என்னிடம் மனது அடம் பிடிக்கும்

தப்பேதும் நீ செய்தால்
தண்டனை என்ன தந்திடனும்?
இதழ் கொண்டு முத்தமிடு
இன்பங்கள் அதனால் பொங்கிடனும்

            (மாங்குருவி)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

No comments:

Post a Comment