பல்லவி
ஓ மேகமே ஓ மேகமே
கார் கூந்தல் பெண்ணவளைக் கண்டாயா?
என் நெஞ்சமே என் நெஞ்சமே
பார்ப்பவளை உன்னவளாய்க் கொண்டாயா?
(ஓ மேகமே)
சரணம் 1
ஆண் -
பூவையின் மனதில் பூகம்பம் - அது
பூவைக்கு நான் தந்த காயங்கள்
பாவையின் கண்களின் கண்ணீரோ
பாவி என் சொல் வடித்த சாயங்கள்
என்னாச்சு ஏ வார்த்தை கொன்னாச்சு...
ஏதாச்சு அவ நெஞ்சு புண்ணாச்சு..
அறியாமல் செய்தது!
(ஓ மேகமே)
சரணம் 2
பெண் -
சொற்கள் மனசை துளையிட்டு
எந்தன் உள்ளம் துண்டாச்சு..
கற்கள் பட்ட வாழை போல்
கவலை வலிகள் ரெண்டாச்சு..
ஆணென்று உன் திமிரு சொன்னாச்சு..
பெண் தானே என் வலிமை நின்னாச்சு..
கண்ணீரும் கூடுது!
(ஓ மேகமே)
(பாடலுக்கான சூழ்நிலை – ஆண் தனது
காதலியை சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று திட்டுகிறான். பிறகு அவளில் பிழை இல்லை
என்று உணர்ந்த பின்பு இப்படிப் பாடுகின்றான்)
ஓ மேகமே ஓ மேகமே
கார் கூந்தல் பெண்ணவளைக் கண்டாயா?
என் நெஞ்சமே என் நெஞ்சமே
பார்ப்பவளை உன்னவளாய்க் கொண்டாயா?
(ஓ மேகமே)
சரணம் 1
ஆண் -
பூவையின் மனதில் பூகம்பம் - அது
பூவைக்கு நான் தந்த காயங்கள்
பாவையின் கண்களின் கண்ணீரோ
பாவி என் சொல் வடித்த சாயங்கள்
என்னாச்சு ஏ வார்த்தை கொன்னாச்சு...
ஏதாச்சு அவ நெஞ்சு புண்ணாச்சு..
அறியாமல் செய்தது!
(ஓ மேகமே)
சரணம் 2
பெண் -
சொற்கள் மனசை துளையிட்டு
எந்தன் உள்ளம் துண்டாச்சு..
கற்கள் பட்ட வாழை போல்
கவலை வலிகள் ரெண்டாச்சு..
ஆணென்று உன் திமிரு சொன்னாச்சு..
பெண் தானே என் வலிமை நின்னாச்சு..
கண்ணீரும் கூடுது!
(ஓ மேகமே)
(பாடலுக்கான சூழ்நிலை – ஆண் தனது
காதலியை சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று திட்டுகிறான். பிறகு அவளில் பிழை இல்லை
என்று உணர்ந்த பின்பு இப்படிப் பாடுகின்றான்)
No comments:
Post a Comment