Wednesday, January 15, 2014

ஓ மேகமே ஓ மேகமே

பல்லவி

ஓ மேகமே ஓ மேகமே
கார் கூந்தல் பெண்ணவளைக் கண்டாயா?
என் நெஞ்சமே என் நெஞ்சமே
பார்ப்பவளை உன்னவளாய்க் கொண்டாயா?


(ஓ மேகமே)


சரணம் 1

ஆண் -   

    பூவையின் மனதில் பூகம்பம் - அது
    பூவைக்கு நான் தந்த காயங்கள்

    பாவையின் கண்களின் கண்ணீரோ
    பாவி என் சொல் வடித்த சாயங்கள்

    என்னாச்சு ஏ வார்த்தை கொன்னாச்சு...
    ஏதாச்சு அவ நெஞ்சு புண்ணாச்சு..

    அறியாமல் செய்தது!

(ஓ மேகமே)


சரணம் 2

பெண் -   

   சொற்கள் மனசை துளையிட்டு
    எந்தன் உள்ளம் துண்டாச்சு..

    கற்கள் பட்ட வாழை போல்
    கவலை வலிகள் ரெண்டாச்சு..

    ஆணென்று உன் திமிரு சொன்னாச்சு..
    பெண் தானே என் வலிமை நின்னாச்சு..

    கண்ணீரும் கூடுது!

(ஓ மேகமே)


(பாடலுக்கான சூழ்நிலை – ஆண் தனது
காதலியை சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று திட்டுகிறான். பிறகு அவளில் பிழை இல்லை
என்று உணர்ந்த பின்பு இப்படிப் பாடுகின்றான்)

No comments:

Post a Comment