பல்லவி
வானவில்லின் நிறங்கள் என்ன
கறுப்பா?
காணவில்லை என் மேல் இன்னும்;
வெறுப்பா?
சரணம் 1
காதல் என்ற நோய் எந்தன்
கண்ணை மறைத்துக் கொண்டது
பாசம் நேசம் யாவையும்
பாதி வழியில் கொன்றது
பாடம் படிக்கும் போதினிலும்
பயித்தியங்கள் பிடித்தது
ஓடம் போல உள்ளமும்
ஓய்வில்லாமல் துடித்தது
இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா
(வானவில்லின்)
சரணம் 2
கணவன் கொடுமை என்றேதும்
கலவரங்கள் இல்லைத்தான்
ஆன போதும் தாய் வதனம்
அகலவில்லை இன்னும்தான்
எந்தன் வயிற்றில் பூத்த மலர்
ஏதும் செய்தி அறிகையில்
உள்ளதை எப்படி மறைப்பேனோ
உண்மையை எப்படி உரைப்பேனோ
இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா
(வானவில்லின்)
(பாடலுக்கான சூழ்நிலை – வீட்டைவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண் சில வருடங்கள் கழித்து தான் செய்த தவறை எண்ணியழும்போது)
வானவில்லின் நிறங்கள் என்ன
கறுப்பா?
காணவில்லை என் மேல் இன்னும்;
வெறுப்பா?
சரணம் 1
காதல் என்ற நோய் எந்தன்
கண்ணை மறைத்துக் கொண்டது
பாசம் நேசம் யாவையும்
பாதி வழியில் கொன்றது
பாடம் படிக்கும் போதினிலும்
பயித்தியங்கள் பிடித்தது
ஓடம் போல உள்ளமும்
ஓய்வில்லாமல் துடித்தது
இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா
(வானவில்லின்)
சரணம் 2
கணவன் கொடுமை என்றேதும்
கலவரங்கள் இல்லைத்தான்
ஆன போதும் தாய் வதனம்
அகலவில்லை இன்னும்தான்
எந்தன் வயிற்றில் பூத்த மலர்
ஏதும் செய்தி அறிகையில்
உள்ளதை எப்படி மறைப்பேனோ
உண்மையை எப்படி உரைப்பேனோ
இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா
(வானவில்லின்)
(பாடலுக்கான சூழ்நிலை – வீட்டைவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண் சில வருடங்கள் கழித்து தான் செய்த தவறை எண்ணியழும்போது)
No comments:
Post a Comment