பல்லவி
தொழில்நுட்ப யுகத்தினிலே
தொழில் தேடும் போதினிலே
எதிர்காலம் உனக்காக காத்திடுமா?
கற்கின்ற பருவத்திலே
கற்காமல் நீ இருந்தால்
வருங்காலம் கனிவாக பார்த்திடுமா?
சரணம் 1
உலகில் வாழ்வது மிக கஷ்டம்
உணராவிட்டால் பெரும் நஷ்டம்
உதயம் காண கல்விதனை
கற்க புறப்படுவாய்!...
வாழ்க்கை என்பது பாதி வனம்
வாழாவிட்டால் பாலைவனம்
வாழ்ந்து காட்டி பின்நாளில்
உலகத்தை வென்றிடுவாய்!
எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!
சரணம் 2
காதல் வைரஸ் வரும் பருவம்
கவிதை எழுதும் ஞானம் வரும்
தோழா கொஞ்சம் நீ அசந்தால்
தோல்வி தேடி வரும்!
அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணி தரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணி விடும்!
எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!
(பாடலுக்கான சூழ்நிலை – மாணவர்களுக்கான அறிவுரை)
No comments:
Post a Comment