Wednesday, January 15, 2014

பொன்மாலைப் பொழுதொன்றில்

பல்லவி

ஆண் -  

    பொன்மாலைப் பொழுதொன்றில்
    பொற வந்து நின்னது போல்
    ஏ புள்ள ஓ வதனம்
    என் நெஞ்சில் பதிஞ்சிடுச்சி...

பெண் -  
 
    கண்ஜாட கவி கொண்டு
    கட்டி என்ன போட்டுபுட்ட
    ஏ இதயம் புறாக்குஞ்சாய்
    ஓ கண்ணில் அடஞ்சிடுச்சி!

(பொன்மாலை)


சரணம் 1

ஆண்  

    பாசம் வச்ச நெஞ்சுக்குழி
    ஒன் நெனப்பால் நெறஞ்சிடுச்சி
    குளிர்கால எண்ணெய் போல்
    ஏ உள்ளம் ஒறஞ்சிடுச்சி!

பெண்  

    பனியான ஓ சிரிப்பில்
    பாதி மனம் கரஞ்சிடுச்சி
    ஓ பார்வை பட்டதுமே
    ஏ உசிரு சிலிர்த்திடுச்சி

(பொன்மாலை)


சரணம் 2

ஆண்

    அடியே நீ கொன்னுபுட்ட
    தீ விழியால் தின்னுபுட்ட
    மடிமீது தல வச்சால்
    மயங்காம தள்ளிப்புட்ட

பெண்

    ஏதேதோ செய்துபுட்ட
    என்னழகை கொய்துபுட்ட
    மார்கழியில் மாலை தந்து
    மதிமயங்கச் செய்துபுட்ட

(பொன்மாலை)


(பாடலுக்கான சூழ்நிலை –  தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

No comments:

Post a Comment