பல்லவி
எரிமலையின் கொடுமைகளை
என் இதயம் தாங்கிடுமா?
புயல்காற்றின் தாலாட்டில்
என் மனது தூங்கிடுமா?
சரணம் 1
காணாத கனவுகள்
கண் முன்னே நிழலாக
விரும்பாத வாழ்வொன்றை
விதி தந்ததே நிஜமாக
எழுதாத கவிதைகள்
ஏட்டினிலே வரியாக
பாடாத பாடல்கள்
காற்றினிலே மொழியாக
சரணம் 2
இதயம் பற்றி எரிகிறதே
இயலாமைகள் வதைக்கிறதே
கலகங்கள் எனக்குள்ளே
கல்லறைகள் அமைக்கிறதே
பாழான தலையெழுத்து
வாழ்க்கை தனை கவிழ்க்கிறதே
வாளாகி என் மனசை
வதைத்து தினம் துலைக்கிறதே
எரிமலையின் கொடுமைகளை
என் இதயம் தாங்கிடுமா?
புயல்காற்றின் தாலாட்டில்
என் மனது தூங்கிடுமா?
சரணம் 1
காணாத கனவுகள்
கண் முன்னே நிழலாக
விரும்பாத வாழ்வொன்றை
விதி தந்ததே நிஜமாக
எழுதாத கவிதைகள்
ஏட்டினிலே வரியாக
பாடாத பாடல்கள்
காற்றினிலே மொழியாக
சரணம் 2
இதயம் பற்றி எரிகிறதே
இயலாமைகள் வதைக்கிறதே
கலகங்கள் எனக்குள்ளே
கல்லறைகள் அமைக்கிறதே
பாழான தலையெழுத்து
வாழ்க்கை தனை கவிழ்க்கிறதே
வாளாகி என் மனசை
வதைத்து தினம் துலைக்கிறதே
No comments:
Post a Comment