Wednesday, January 15, 2014

எரிமலையின் கொடுமைகளை

பல்லவி

எரிமலையின் கொடுமைகளை
என் இதயம் தாங்கிடுமா?
புயல்காற்றின் தாலாட்டில்
என் மனது தூங்கிடுமா?

சரணம் 1

காணாத கனவுகள்
கண் முன்னே நிழலாக
விரும்பாத வாழ்வொன்றை
விதி தந்ததே நிஜமாக

எழுதாத கவிதைகள்
ஏட்டினிலே வரியாக
பாடாத பாடல்கள்
காற்றினிலே மொழியாக

சரணம் 2

இதயம் பற்றி எரிகிறதே
இயலாமைகள் வதைக்கிறதே
கலகங்கள் எனக்குள்ளே
கல்லறைகள் அமைக்கிறதே

பாழான தலையெழுத்து
வாழ்க்கை தனை கவிழ்க்கிறதே
வாளாகி என் மனசை
வதைத்து தினம் துலைக்கிறதே

No comments:

Post a Comment