பல்லவி
கானக் குயில்கள் வாழ்த்து செய்தி பாடும் - இளம்
காற்று வந்து காதல் பூக்கள் சூடும்
இந்தப் பூங்குயில் தினம் தோறுமே
பாடல்கள் இனி பாடுமே
தாளம் தட்டிடுடம் மேளம் கொட்டிடும் நாளிலே
(கானக் குயில்கள்)
சரணம் 1
சரணம் 1
கண்கள் பட்டது உன்னைத் தொட்டது அன்று..
இன்று உன்னை மயக்கும் செல்ல செண்பக மலரானது…
நாணம்; சொட்டிடும் சாரல் கொட்டிடும் நெஞ்சம் - உன்
பார்வை பட்டதும் கரைந்து போகும் பனியானது
என் காதலே வாழ்வானதே
சந்தோசமே நான் வாழ்வதே
நீ இல்லை என்றால் நானும் இல்லை மன்னவா!
(கானக் குயில்கள்)
சரணம் 2
என்னைத் தாண்டிச் செல்லும் அந்த நொடியில் - உன்
கண்ணில் பார்த்தேன் என்னைக் கொல்லும் லட்சம் மின்னல்
உன்னைத் தினமும் நெஞ்சில் சுமந்து இருப்பேன் -
நீ
போகும் நிமிடம் எனக்குள் தோன்றும் கோடி இன்னல்
என் வாழ்க்கையே உனக்கானதே
நீ நீங்கினால் நான் கானலே
எந்தன் காதல் இன்னும் கொஞ்சம் சொல்லவா?
(கானக் குயில்கள்)