Sunday, November 8, 2015

கானக் குயில்கள் வாழ்த்து செய்தி பாடும்

பல்லவி

கானக் குயில்கள் வாழ்த்து செய்தி பாடும் - இளம்
காற்று வந்து காதல் பூக்கள் சூடும்

இந்தப் பூங்குயில் தினம் தோறுமே
பாடல்கள் இனி பாடுமே
தாளம் தட்டிடுடம் மேளம் கொட்டிடும் நாளிலே

(கானக் குயில்கள்)

சரணம் 1

கண்கள் பட்டது உன்னைத் தொட்டது அன்று..
இன்று உன்னை மயக்கும் செல்ல செண்பக மலரானது…

நாணம்; சொட்டிடும் சாரல் கொட்டிடும் நெஞ்சம் - உன்
பார்வை பட்டதும் கரைந்து போகும் பனியானது

என் காதலே வாழ்வானதே
சந்தோசமே நான் வாழ்வதே

நீ இல்லை என்றால் நானும் இல்லை மன்னவா!

(கானக் குயில்கள்)

சரணம் 2

என்னைத் தாண்டிச் செல்லும் அந்த நொடியில் - உன்
கண்ணில் பார்த்தேன் என்னைக் கொல்லும் லட்சம் மின்னல்

உன்னைத் தினமும் நெஞ்சில் சுமந்து இருப்பேன் - நீ
போகும் நிமிடம் எனக்குள் தோன்றும் கோடி இன்னல்

என் வாழ்க்கையே உனக்கானதே
நீ நீங்கினால் நான் கானலே

எந்தன் காதல் இன்னும் கொஞ்சம் சொல்லவா?

(கானக் குயில்கள்)