Saturday, September 27, 2014

மக்காவில் பிறந்த மாணிக்கமே

பல்லவி

மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே..

துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..

(மக்காவில்)

சரணம் 1

பிஞ்சு மனசிலும் நஞ்சை ஊற்றி
சொல்லால் நபிகளை வதைத்தனரே
தூதரின் மனதை உடைப்பதற்காக
வஞ்சனை வார்த்தையை கதைத்தனரே

முன்னோர் சொன்னதை முழுவதுமாக
முஹம்மத் மறுப்பதாய் பழித்தனரே
முகமன் சொல்லி சிரித்தால்கூட
முகத்தை குறைஷியர் சுழித்தனரே

(மக்காவில்)


சரணம் 2

அறியாமையின் இருளைப் போக்க
அண்ணல் நபியே நினைத்தீரே..
இரு பாலாரும் அல்லாஹ்வை வணங்க
இரு கரம் ஏந்தி துதித்தீரே..

தொல்லைகள் செய்த மக்களைக் கூட
தூயவர் நபியே மதித்தீரே..
நன்மை செய்தால் சுவர்க்கம் உண்டென
மக்கள் மனதில் பதித்தீரே..
                                                                             

(மக்காவில்)

No comments:

Post a Comment