Saturday, September 27, 2014

இன்பங்கள் பொங்கும்

பல்லவி

இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!

இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (ஐஐ)

சரணம் 1

பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே

உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..

தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..

பொன் நாள் இது (II)


சரணம் 2

இப்றாஹீமின் கனவினிலே
இஸ்மாயிலை பலியிடவே
துணிந்தார் மறுதினமே
வஹி இறங்கியது அக்கணமே

புதல்வரை அன்புடன் நீர்
விடுதலை செய்வீர்..

சுவனத்து ஆடு இதோ
ஏற்றுக்கொள்வீர்..

குர்பான் கொடுப்பீர் (II)

No comments:

Post a Comment