Wednesday, January 18, 2017

இருவிழி பார்க்கும்போது

இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே

இந்தக் காதல் முடிந்துவிடின்..
எந்தன் சுவாசம் கருகிவிடும்
எனதுயிர் உனக்காகவே
.................................
இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே
................................
பறவைகள் ஏங்கும்
பார்த்ததுமே உன் விழி படபடத்தால் ஓ
உன் விழி படபடத்தால்

உயிரிசை கேட்கும்
இதழ்களையே நீ மெல்;ல அசைத்துவிட்டால் ஓ
நீ மெல்;ல அசைத்துவிட்டால்
.....................................
நினைவோ நீளும்
எறும்பாய் ஊறும்
வலியும் கூடும்
அதனாலே அதனாலே

இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே

இந்தக் காதல் முடிந்துவிடின்..
எந்தன் சுவாசம் கருகிவிடும்
எனதுயிர் உனக்காகவே

No comments:

Post a Comment