பல்லவி
ஆண்
பட்டாம் பூச்சியின் இறக்கை போல்
உன் விழி இரண்டும் படபடக்கும்
பட்டு போன்ற விரல் பார்த்து
மூச்சு மட்டும் தடதடக்கும்
பெண்
கைகள் போர்த்து சாலையெல்லாம்
உன்னுடன் மட்டும் வரப் பிடிக்கும்
ஓரப் பார்வை நீ பார்த்தால்
இதயம் ஏனோ வெடவெடக்கும்
சரணம்
ஆண்
வார்த்தைகள் கிளியாக நீ சொல்கையில்
அங்கே பார் விண்மீன்கள் சிரிக்கின்றது
கோபத்தில் நீ சொன்ன வார்த்தைகளும்
என் நெஞ்சில் மலர்போல இருக்கின்றது
பெண்
பிழையாக நீ எழுதும் கவிதைகளோ
டயறிக்குள் மயிலிறகாய் இருக்கின்றது
புளி மாங்காய் உப்பிட்டு நீ தந்தது
மனசுக்குள் மறக்காமல் இனிக்கின்றது
சரணம்
ஆண்
என் வீட்டு ரோஜாக்கள் தினம் பூப்பது
அன்பே உன் கருங்கூந்தலில் குடியேறத்தான்
வான் மீட்டும் சங்கீத மழை பெய்வது
பெண்ணே உன் இதழோடு விளையாடத்தான்
ஆண்
பெண்ணாக நான் மண்ணில் பிறந்திருப்பது
கண்ணாளா நானுந்தன் தோள் சேரத்தான்
கண் ஓரம் வழிகின்ற சிறு நீர்துளி
எந்நாளும் நீ வேண்டும் அதற்காகத்தான்
ஆண்
பட்டாம் பூச்சியின் இறக்கை போல்
உன் விழி இரண்டும் படபடக்கும்
பட்டு போன்ற விரல் பார்த்து
மூச்சு மட்டும் தடதடக்கும்
பெண்
கைகள் போர்த்து சாலையெல்லாம்
உன்னுடன் மட்டும் வரப் பிடிக்கும்
ஓரப் பார்வை நீ பார்த்தால்
இதயம் ஏனோ வெடவெடக்கும்
சரணம்
ஆண்
வார்த்தைகள் கிளியாக நீ சொல்கையில்
அங்கே பார் விண்மீன்கள் சிரிக்கின்றது
கோபத்தில் நீ சொன்ன வார்த்தைகளும்
என் நெஞ்சில் மலர்போல இருக்கின்றது
பெண்
பிழையாக நீ எழுதும் கவிதைகளோ
டயறிக்குள் மயிலிறகாய் இருக்கின்றது
புளி மாங்காய் உப்பிட்டு நீ தந்தது
மனசுக்குள் மறக்காமல் இனிக்கின்றது
சரணம்
ஆண்
என் வீட்டு ரோஜாக்கள் தினம் பூப்பது
அன்பே உன் கருங்கூந்தலில் குடியேறத்தான்
வான் மீட்டும் சங்கீத மழை பெய்வது
பெண்ணே உன் இதழோடு விளையாடத்தான்
ஆண்
பெண்ணாக நான் மண்ணில் பிறந்திருப்பது
கண்ணாளா நானுந்தன் தோள் சேரத்தான்
கண் ஓரம் வழிகின்ற சிறு நீர்துளி
எந்நாளும் நீ வேண்டும் அதற்காகத்தான்
No comments:
Post a Comment