Monday, November 3, 2014

தேன் ஊறும் உன் கன்னம்

பல்லவி

ஆண் 

 தேன் ஊறும் உன் கன்னம்
தென்பட்டால் என் உள்ளம்
களவாக உனைத் தேடும் மானே...

பெண்;:

 பொல்லாத உன் கைகள்
வில்லாக தினம் மாறி
அம்பாக எனைத் தாக்கும் ஆணே

இருவர்

நாணம் என்ற கோட்டையை நாம் உடைக்கலாமா?
குளத்துக்குள்ள எறங்கி தினம் மீன் புடிக்கலாமா?



சரணம் 1

ஆண்

உன் தேகக் குழலை எடுத்து
நானும் ஊதவா
அத்துவானக் காட்டுக்குள்ள
வேட்டையாடவா

பெண் 

பட்டப் பகல் நேரமிது
புத்தி இல்லையா
வெட்டவெளி இருக்குதையா
ரொம்பத்  தொல்லையா

ஆண்

என் புத்திக்குள்ள போதையத்தான்
ஏத்தி விடுறியே

பெண் 

என் வெட்கம் என்ற பாதையத்தான்
மாத்தி விடுறியே



சரணம் 2

ஆண் 

 சாமக்கோழி கூவும் போதும்
பிச்சுத் தின்னுறேன்
கரண்ட் அடிக்கும்; எடத்தயெல்லாம்
கணக்கு பண்ணுறேன்

பெண்

உன் பார்வை வந்து மோதும்போது
குழந்தை ஆகிறேன்
நீ போர்வை கொண்டு மூடும்போது
தொலைந்து போகிறேன்

ஆண்

குடிச்ச பின்னும் தாகம் இன்னும்
தீரவில்லையே

பெண்

தீரும் வரை குடிச்சிக்கலாம்
சோர்வு இல்லையே

No comments:

Post a Comment