Monday, November 3, 2014

எப்போது என் வெறுமையை

பல்லவி

எப்போது என் வெறுமையை
தீர்க்கப் போகிறாய்..
ஏன் என் பொறுமையை
இன்னும் சோதிக்கிறாய்?



சரணம் 1

ஆண்

நான் பூக்களோடு
சிநேகமான செய்தி அறிவாயா?
உன் தோள்களோடு
சாய்ந்து வாழும் நாட்கள் தருவாயா?

என் பார்வையோடு
நீங்கிடாமல் நாளும் இருப்பாயா?
என் காதலோடு
கைகள் கோர்த்து கீதம் இசைப்பாயா?



சரணம் 2

பெண்;:

என் காதல் தாகம்
தீர்ந்து போகும் நாட்கள் வர வேண்டும்
என் பாதி பாகம்
நீயே ஆகும் வரங்கள் தர வேண்டும்

உன் கண்கள் தீட்டும்
ஓவியங்கள் உன் அன்பைக் கூறும்
நீ மாலை சூட்டும்
நாளில் தானே ஏக்கங்கள் தீரும்

No comments:

Post a Comment