Monday, November 3, 2014

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட

பல்லவி

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட
காரணம் நீங்கள் தந்தையே..
மரண வலி நான் கொடுத்த போதும்
மகிழ்வுடன் பெற்றாயே என் தாயே!

இன்று நான் ஆகிவிட்டேன்
வாழ்க்கையைக் கற்ற பெண்ணாக
இனிமேல் நானிருப்பேன்
உங்களின் இரு கண்ணாக

ஆராரிரோ பாடினீர்கள்..
என் சந்தோசத்தை மட்டுமே நாடினீர்கள்



சரணம் 1

சிறு பிள்ளையாய் நானிருக்கையிலே
பெரும் மகிழ்வுடனே கொஞ்சினீர்கள்..
பருவ வயதடைந்ததும் என்வாழ்வு
திசைமாறாதிருக்க அஞ்சினீர்கள்

நல்ல நண்பர்கள் யாரென்பதை
அறிவுரையாகக் கூறினீர்கள்..
எதிர்காலம் சிறப்பாக அமைய
கல்வியை இதயத்தில் கீறினீர்கள்

தம்பிக்கும் தங்கைக்கும் இதையே
நம்பிக்கை விதையாக தூவினீர்கள்

சரணம் 1

கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது

பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே

என் இறைவா என்றும் - என்
அன்னை தந்தைக்கு அருள்புரிவாய்!

No comments:

Post a Comment