Friday, October 31, 2014

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்

பல்லவி

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்
உயிரே என்று தேடி நின்றேன்
நீ போன பின் என்னை மறந்து
உருமாறி வாடி நின்றேன்



சரணம் 1

பெண்

வார்த்தையால் என் பாசத்தை
சொல்லத் தெரியவில்லை
இதுவரை உன்னைப் போல்
எவரும் கொல்லவில்லை

விழிகளில் அம்பு வைத்து
வீசியே வலிகள் தந்தாய்
வழியிலே எனைப் பார்த்தால்
பூக்களை பரிசாய் தந்தாய்



சரணம் 2

ஆண்

கண்களில் காந்தம் வைத்து
என்னை நீ திருடிக்கொண்டாய்
மென்விரல் கொண்டெந்தன்
கன்னங்கள் வருடிச் சென்றாய்

தென்றலின் ஈரம் போல
பேச்சாலே சுகங்கள் தந்தாய்
நாளைக்கு என்ன பேசலாமென
பாடங்கள் பயிலச் செய்தாய்

No comments:

Post a Comment