Wednesday, October 29, 2014

மார்புக்குள் ஒரு குடிசை செய்து

பல்லவி

மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் ஒரு சோலை செய்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்



சரணம் 1

ஆண்

காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்

பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்


சரணம் 2

பெண்

எந்தன் பார்வையில் உந்தன் பூமுகம்
என்றும் படிந்திட ஆசையடா
என்னைத் தாண்டி நீ செல்கையிலே
எனக்குள் காதலின் ஓசையடா

என் விழியோரம் பெருகும் நீர்த்துளி
உன்னை எண்ணியே விழுகிறது
நீயும் நானும் ஒன்றாய்ச் சேர
இருதயம் பலமுறை தொழுகிறது!

No comments:

Post a Comment