Sunday, October 26, 2014

ஓராயிரம் பூக்கள்

பல்லவி

ஓராயிரம் பூக்கள்
ஒன்றாக மலரும் மலரும்
ஒவ்வொரு இரவும்
காலையில் புலரும் புலரும்



சரணம் 1

பெண்

என் மனவெளியில் ஆனந்தமில்லை
என் இதயத்தில் பேரின்பமில்லை
உன் கண்களில் காதல்களில்லை
உன் நெஞ்சில் ஈரங்களில்லை

ஆண்

செல்லக்கிளியே என்னை மாற்றிடு
உள்ளம் தெளிய தலை கோதிடு
எனை எனக்கு பறைசாற்றிடு
வீணையாக்கி தினம் மீட்டிடு



சரணம் 2

ஆண்

தீயவற்றை நான்; தாண்டினேன்
திருந்திய பின் உனை பார்க்கிறேன்
அன்புக் கணவனாய் நான் மாறுவேன்
அன்பே உனக்கு சேய் ஆகுவேன்

பெண்

நெஞ்சில் பொங்கும் ஆனந்தமே
இனி எனக்கு பேரின்பமே
நீயே எந்தன் ஆகாயமே
நீங்கும் எந்தன் துயர் யாவுமே!

No comments:

Post a Comment