Friday, October 24, 2014

அன்பை அள்ளிப் பொழியும்

பல்லவி

அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை!

சரணம் 1

காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...

வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே

சரணம் 2

சமூகங்கள் திருந்திவிட
நபிகளாரைத் தந்தாயே..
தூய நபி நாயகத்தின்
உம்மத்தாயெமை வைத்தாயே

மறுமையில் எமக்காக
சுவனத்தைத் தருவாயே..
சுவனத்தை அடைவதற்கு
நற்குணங்கள் தருவாயே!

No comments:

Post a Comment