Tuesday, October 28, 2014

மழையில் நனைந்த சிறு புறாவாய்

பல்லவி

மழையில் நனைந்த சிறு புறாவாய்
மனசில் அன்று பரபரப்பு
காலை நேர இளம் வெயிலாய்
எனக்குள் இன்று கதகதப்பு

நீயிருக்கிறாய் என்
நினைவுகளின் ஓரமடி
கண் தூக்கம் மறந்து
கடந்தன பல வாரமடி



சரணம் 1

உன்னோடு இருக்கும் நிமிடங்கள்
சுவர்க்க வாசனை தருகிறது
நீ மறைந்தால் கண்ணைவிட்டு
இதயம் இரண்டாய் உடைகிறது

ரகசியக் கனவுகளில் எல்லாம்
உன்னை வைத்து பூட்டுகிறேன்
நீயே எந்தன் சுவாசம் என
எல்லோரிடமும் காட்டுகிறேன்



சரணம் 2

பெண் நிலவே நீதான்
எந்தன் வாழ்வின் ஆதாரமாய்
நீயற்ற கணம் எல்லாமே
ஆகுது இங்கே சேதாரமாய்

அன்பு நிறைந்த இதயக் குளத்தில்
பூத்தாயே வெண் தாமரையாய்
நட்சத்திர வானத்திலே நீ
ஒளி வீசும் பிறை நிலவாய்

No comments:

Post a Comment