Sunday, October 26, 2014

உயிருக்குள் நீ பாதி

பல்லவி

உயிருக்குள் நீ பாதி
உணர்வினிலே நீ மீதி

மாஞ்சோலை மனசுக்குள்
மழை போல விழுந்தவளே..
சொல்லாக இருந்தென்னுள்
கவிதையாய் எழுந்தவளே..


சரணம் 1

ஆண்  

  கதை பேசும் கரு விழிக்குள்
சுகமாக உறங்கிடவா?
ரோஜாப் பூ உதட்டுக்கு
மெதுமெதுவாய் இறங்கிடவா?

பெண்  

  என் அருகே வரும் உன்னை
மிக மெதுவாய் தள்ளிடவா?
பின் இருந்து எனை அணைக்கும்
உனை நானும் கிள்ளிடவா?



சரணம் 2

ஆண்

  பால் கோப்பை மனசுக்குள்
பழத் துண்டாய் விழுந்தாயே..
நெஞ்சென்ற வயலுக்குள்
நெற் கதிராய் முளைத்தாயே!

பெண்  

  நந்தவனச் சோலைக்குள்
நறுமலராய் பூத்தாயே..
நான் உந்தன் சேய் போல
நாளெல்லாம் காத்தாயே!

No comments:

Post a Comment