பல்லவி
உயிருக்குள் நீ பாதி
உணர்வினிலே நீ மீதி
மாஞ்சோலை மனசுக்குள்
மழை போல விழுந்தவளே..
சொல்லாக இருந்தென்னுள்
கவிதையாய் எழுந்தவளே..
சரணம் 1
ஆண்
கதை பேசும் கரு விழிக்குள்
சுகமாக உறங்கிடவா?
ரோஜாப் பூ உதட்டுக்கு
மெதுமெதுவாய் இறங்கிடவா?
பெண்
என் அருகே வரும் உன்னை
மிக மெதுவாய் தள்ளிடவா?
பின் இருந்து எனை அணைக்கும்
உனை நானும் கிள்ளிடவா?
சரணம் 2
ஆண்
பால் கோப்பை மனசுக்குள்
பழத் துண்டாய் விழுந்தாயே..
நெஞ்சென்ற வயலுக்குள்
நெற் கதிராய் முளைத்தாயே!
பெண்
நந்தவனச் சோலைக்குள்
நறுமலராய் பூத்தாயே..
நான் உந்தன் சேய் போல
நாளெல்லாம் காத்தாயே!
உயிருக்குள் நீ பாதி
உணர்வினிலே நீ மீதி
மாஞ்சோலை மனசுக்குள்
மழை போல விழுந்தவளே..
சொல்லாக இருந்தென்னுள்
கவிதையாய் எழுந்தவளே..
சரணம் 1
ஆண்
கதை பேசும் கரு விழிக்குள்
சுகமாக உறங்கிடவா?
ரோஜாப் பூ உதட்டுக்கு
மெதுமெதுவாய் இறங்கிடவா?
பெண்
என் அருகே வரும் உன்னை
மிக மெதுவாய் தள்ளிடவா?
பின் இருந்து எனை அணைக்கும்
உனை நானும் கிள்ளிடவா?
சரணம் 2
ஆண்
பால் கோப்பை மனசுக்குள்
பழத் துண்டாய் விழுந்தாயே..
நெஞ்சென்ற வயலுக்குள்
நெற் கதிராய் முளைத்தாயே!
பெண்
நந்தவனச் சோலைக்குள்
நறுமலராய் பூத்தாயே..
நான் உந்தன் சேய் போல
நாளெல்லாம் காத்தாயே!
No comments:
Post a Comment