Sunday, October 26, 2014

சங்கிலியாய் என்னுள்ளே

பல்லவி

சங்கிலியாய் என்னுள்ளே
நீளுகின்ற நினைவு
சந்தோஷம் யாவையும்
நீக்கிவிடும் நிகழ்வு

தொடர்ந்திடும் சோதனைகள்
சோர்வினைக் கூட்டும்
உள்ளத்தின் வலிமைகள்
உடைந்தென்னை வாட்டும்


சரணம் 1

வெறுங் கண்ணீர் வடிக்காது
வேதனையுடன் நானிருந்தேன்
வெடித்து மனம் வலித்தபோது
அழுது நான் துடித்திருந்தேன்

மாருதத்தின் சுகந்தத்தில்
மயங்கிடத்தான் காத்திருந்தேன்
சூறாவளி வருமென்று
கனவிலா பார்த்திருந்தேன்?


சரணம் 2

அடுத்து வரும் நாட்களிலே
இந்த துன்பங்கள் நீங்கிடுமா?
எப்போதும் எனை மட்டும்
வதைத்ததிங்கே வாட்டிடுமா?

மொட்டவிழும் மகிழ்வெல்லாம்
உடனடியாய் கருகிடுமா?
என் நெஞ்சம் கரைந்திங்கு
கண்ணீரும் பெருகிடுமா?

No comments:

Post a Comment