Wednesday, October 29, 2014

அன்பை எல்லாம்

பல்லவி

அன்பை எல்லாம்
மறைத்து வைத்தாய் மொத்தமாக
நேற்று அதை
உரத்துச் சொன்னாய் முத்தமாக!


சரணம் 1

பெண்

நீ என்னைக் காதலிக்கிறாய்
நான் உனக்காய் காத்திருக்கிறேன்
நீ என்னைக் காண வருகையில்
நான் புதிதாய் பூத்திருக்கிறேன்

உறக்கம் தின்ற என் தலைவா
உனக்குள்ளே நான் இருந்திடவா?
எல்லா நிமிடமும் கரைகிறதே
எனக்குள்ளே நீ இருந்திட வா!



சரணம் 2

ஆண்

நீ என்னை வாசிக்கிறாய்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னைக் களவாடினாய்
நான் உனக்குள் மொழியாகினேன்

உன் தோளில் தலை சாய்கிறேன்
காதல் காய்ச்சலால் காய்கிறேன்
தொடும் தூரம் நீ இருந்தாலும்
தொடாமல் நிலவாய் தேய்கிறேன்

No comments:

Post a Comment