Tuesday, October 28, 2014

இதயம் இப்படி வலிக்கவில்லை

பல்லவி

இதயம் இப்படி வலிக்கவில்லை
இதுவரை எதையும் ஒழிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
தனிமையை தனியாய் கழிக்கவில்லை

உறக்கம் முன்போல் இனிக்கவில்லை
உண்ணவும் பருகவும் பிடிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
உயிரும் மனசும் எனக்கு இல்லை!



சரணம் 1

கனவும் தெரியல நிஜமும் தெரியல
காலையும் மாலையும் உன் நினைப்பு
இரவும் தெரியல பகலும் தெரியல
இருதய இயக்கத்தில் இரு துடிப்பு

உந்தன் ஞாபகத் தீயில் நானும்
சுகமாய் இங்கே குளிர் காய்வேன்
களங்கமற்ற உன் சிரிப்பொலியால்
சுவாசிக்கும்போது சுகம் பெறுவேன்

உன் கண் அசைவில் ஒரு மின்மினி
உயிரோவியமாய் எனக்குள்ளே நீ


சரணம் 2

ஒரு திசை பார்த்து தனித்திருந்தேனே
ஓரப் பார்வையில் எனை மறித்தாய்
உன் விழி அசைவில் நான் தொலைந்தேனே
எந்தன் உயிரில் பூ பறித்தாய்

நீ வரும் அந்த ஒற்றை நொடியில்
மனதில் தோன்றும் புது வசந்தம்
என்னைப் பார்த்து நீ சிரிப்புதிர்த்தால்
இதயத்தில் வீசும் புது சுகந்தம்

பொழுதெல்லாம் உன்னால் பூஞ்சோலை
சுகமாப் புலரும் இனி அதிகாலை

No comments:

Post a Comment