Monday, November 3, 2014

சவுகரியம் வருமென்றால்

பல்லவி

சவுகரியம் வருமென்றால்
சாதாரணமாய் வந்திடாதே
சந்தர்ப்பம் அமைத்துக்கொள்
சட்டென்று தளர்ந்நிடாதே



சரணம் 1

பலமான மரம்தானே
பலகையாய் மாறுகிறது
வளமான எதிர்காலம்
உன் முன்னே தான் போகிறது

குடிசையில் வாழ்ந்நதவன்தான்
மாளிகையை தேடுகிறான்
நம்பிக்கை உள்ளவன்தான்
துணிவோடு ஓடுகிறான்

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே



சரணம் 2

கவலையின் கைப்பிடித்து
முன்னோக்கி நடைபோடு
தோல்வியைத் தோளோடு
அணைத்தபடி விளையாடு

வெற்றியின் உச்சத்தை
வெறுங் கனவு காணாதே
வலிகளைக் காணாமல்
வளம் வந்து சேராதே

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே

No comments:

Post a Comment