Tuesday, November 1, 2016

பௌர்ணமி போலெந்தன்


பல்லவி
ஆண்
பௌர்ணமி போலெந்தன்
பருவத்தில்  வந்தவளே
மௌனத்தால் பேசி என்
மனதுக்குள் வாழ்ந்தவளே

பெண்
வீணையாய் மாறி என்
இளமையை மீட்டியவனே
காதல் இதயத்தில்
வர்ணங்கள் தீட்டியவனே

சரணம்

பெண்
இப்படி இப்படி தான்
காதலே பிறக்குதா?
காதல் வந்த பின்
உலகமே மறக்குதா?

ஆண்
உனக்கும் என்னைப்போல் – பல
சிறகுகள் முளைக்குதா..
கைகோர்த்து நடந்திட அடி
ஆசையும் அழைக்குதா?

பெண்
என் பெயரை நீ சொல்லிடும்போது
புதிதாய் நான் பிறந்தேன்


சரணம் 2

ஆண்
துளி புன்னகை புரிகையில் - அடி
தென்றல்தான் மோதுதா
இனியவள் உன்னைத்தான்  - என்
இதழ்களும் தேடுதா?

பெண்
உன் மனம் உன்னிடம் - வந்து
முகவரி கேட்குதா
இரவுகள் இரவுகள் உன்னை
எண்ணியே நீளுதா?

ஆண்
உன்னை நான் கண்டுபிடித்தேன்
என்னை நான் தொலைத்தேன்!!!

பாடலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

No comments:

Post a Comment