பல்லவி
நான் தந்த மடலினை
நடுவீதியில் எறிந்தவளே
நான் தந்த மனசை
என்ன செய்யப் போகிறாய்?
எனக்குள் தீ கடலினை
பொங்கியெழச் செய்தவளே
உனக்காக வாழும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?
சரணம் 1
பாசத்தைப் புரிவதில்
அசட்டையாக இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் மட்டும்
அட்டையாக இருக்கிறாய்
தூக்கத்தை கெடுப்பதில்
ராட்சசியாய் இருக்கிறாய்
துக்கத்தை மட்டும்
குறைச்சலின்றி தருகிறாய்
சிட்டாக சிறகடித்து
வெட்டென மறைகிறாய்!
சரணம் 2
எல்லாமே மறந்திருந்தால்
என் முன்னே வருகிறாய்
உன்னை நாடி நான் வந்தால்
உடனடியாய் மறைகிறாய்
விடை தெரியா வினாவாக
எனக்குள்ளே எழுகிறாய்
அணை கடந்த வெள்ளம்போல்
உயிருக்குள் விழுகிறாய்
சட்டென்று என்னைப் பார்த்து
மொட்டென மலர்கிறாய்!
நான் தந்த மடலினை
நடுவீதியில் எறிந்தவளே
நான் தந்த மனசை
என்ன செய்யப் போகிறாய்?
எனக்குள் தீ கடலினை
பொங்கியெழச் செய்தவளே
உனக்காக வாழும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?
சரணம் 1
பாசத்தைப் புரிவதில்
அசட்டையாக இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் மட்டும்
அட்டையாக இருக்கிறாய்
தூக்கத்தை கெடுப்பதில்
ராட்சசியாய் இருக்கிறாய்
துக்கத்தை மட்டும்
குறைச்சலின்றி தருகிறாய்
சிட்டாக சிறகடித்து
வெட்டென மறைகிறாய்!
சரணம் 2
எல்லாமே மறந்திருந்தால்
என் முன்னே வருகிறாய்
உன்னை நாடி நான் வந்தால்
உடனடியாய் மறைகிறாய்
விடை தெரியா வினாவாக
எனக்குள்ளே எழுகிறாய்
அணை கடந்த வெள்ளம்போல்
உயிருக்குள் விழுகிறாய்
சட்டென்று என்னைப் பார்த்து
மொட்டென மலர்கிறாய்!
No comments:
Post a Comment