Friday, July 29, 2016

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்

ஆண்

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்
பூவின் இதழாய் அதரம் கண்டேன்
நெஞ்சம் பறித்திடும் அழகைக் கண்டேன்
வற்றிவிட்ட உன் இடையைக் கண்டேன்

உன்னால் தோன்றுதே பொற்காலம்
உலா போகுதே வெண் மேகம்
உன்னைத் தேடுதே என் வானம்
நிலவே ஏ நிலவே

பெண்

அலை மோதிடும் கடலாக
என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ



ஆண்

நதியே நான் தனியே
காத்திருந்தேன் வா அருகே
கவியே இளம் பிறையே
நீ பேசும் கிளியே



பெண்
என்னைத் தீண்டிடும் நேரம் எல்லாம்
கண்கள் பார்த்து நீ சிரிப்பாய் சிரிப்பாய்
கொஞ்சம் நானும்தான் கோபம் கொண்டால்
என்னைப் பார்த்து நீ ரசிப்பாய் ரசிப்பாய்

அலை மோதிடும் கடலாக
 என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ

No comments:

Post a Comment