Friday, July 29, 2016

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்

பல்லவி

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்
வீழ்ந்தால் உன் நெஞ்சோடு சாயணும்
உன் பார்வை என்றும் நானாகனும்

வசந்தம் கண்முன்னே தோன்றனும்
வசந்தத்தின் வாசல் நீயாகனும்
என் காதல் கடல் தாண்டி சேரணும்

நரணம் 1

சேர்த்து வைத்த இனிமையெல்லாம்
சில்லறையா சிதறுது
பூத்திருந்த பூக்கள் இப்போ
ஒன்னு ஒன்னா உதிருது

ஏற்றி வச்ச தீபச் சுடர
காத்து வந்து விரட்டுது
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
சாவி கேட்டு மிரட்டுது

சரணம் 2

வாட்டி நிற்கும் ஏக்கமின்று
வட்டம் போட்டு சுத்துது
போட்டி போட்டு என் மனசும்
நெருப்பு இன்றி பத்துது

காலம் நேரம் சதிகள் செஞ்சு
நம்ம பிரிச்சு வைக்குது
ஊசி போல வேதனைகள்
உள் நுழைந்து தைக்குது

No comments:

Post a Comment