பல்லவி
ஆண்
அடியே நீயே கொலக்காரி
உன் அழகு என்ன கொல்லுதடி
பெண்
திருடா அருகே வர வேண்டாம்
நீ தள்ளி நில்லு ரெண்டு அடி
அனு பல்லவி
ஆண்
கொழந்த மனசுக் காரேன்டி
கொஞ்ச நானும் வாரேன்டி
பெண்
வந்திடாதே முன்னாடி - நான்
தொட்டா உடையிற கண்ணாடி
சரணம் 1
ஆண்
ஆளான பொண்ணே ஒன் நெனப்பால்
ஆறடி உயரம் தேயுதடி..
பொன்மானே உன்ன ரசித்தேனே
மனசு ஒம்மேல் சாயுதடி..
விண்மீன்கள் நெறஞ்ச வானத்துல
நிலவு தனியா காயுதடி..
உருவான காதல் கரைபுரண்டு
உயிரே ஒம்மேல் பாயுதடி..
சரணம் 2
பெண்
சமநிலை இன்றி இருதயமும்
அலைகள் ஆடும் கடலாகும்
பார்வை தோட்டா துளைக்கிறதே
இதுவும் காதல் மடலாகும்
ஒருநாள் உன்னை பிரிந்தாலும்
மனதில் காதல் குளிர் ஏறும்
உன்னைக் கண்ட பின்னாலே
மருந்தே இன்றி குணமாகும்
No comments:
Post a Comment