Friday, April 1, 2016

வானம் விடிஞ்சிருச்சு

பல்லவி

வானம் விடிஞ்சிருச்சு
வாழ்க்க விடியலயே
தூரம் முடிஞ்சிருச்சி
துன்பம் முடியலயே

மரணத்தின் வாசலோ
மனக் கண்ணில் தோன்றுதே
வாழும் வழி தெரியாம
நாட்களும்தான் நீளுதே

சரணம் 1

யதார்த்தம் என்றொரு
மரண நிலை உள்ளதே
இதயச் சுமை அதிகரித்து
தினம் தினம் கொல்லுதே

தலைவிதி என்றொரு
வியப்புக்குறி உள்ளதே
விதி விலக்கு எதுவுமின்றி
உயிர் வலிக்க செய்யுதே


சரணம் 2

ராகங்கள் சுரம் மாறி
முகாரியாய் ஆகுதே
மேகங்கள் தீப்பிடித்து
சாம்பலாகிப் போகுதே

சோகங்கள் துரத்தியே
சோர்வினை காட்டுதே
வேகங்கள் குறைந்துயெம்
வேதனையை கூட்டுதே

No comments:

Post a Comment