Friday, April 1, 2016

நபி பெருமானாரின்


பல்லவி

நபி பெருமானாரின்
புகழினைப் பாட
வார்த்தைகள் ஏது
எல்லை கிடையாது

கருணையின் வடிவாய்
வையகம் சிறந்திட
இறையோன் தந்தானே
தூயவர் நபியை
நபி பெருமானின்

சரணம் 1

மடமைகள் கொளுத்தி
மலர்ச்சியை தந்தார் (2)
கடமைகள் மதித் - திடும்
மனிதராய் திகழ்ந்தார்

தொழுகையைப் பேணியே
தொழுகவென்று சொன்னார்
அழுகை  துஆவின்
ஆழம் என்று சொன்னார்
நபி பெருமானின்


சரணம் 2

ஏழைகளை மதித்தே
ஏற்க வேண்டும் என்றார் (2)
இறையோனை போற்றும் - வழி
வகையை சொன்னார்
                     
கனிவான மார்க்கமதை
கடைப்பிடிக்கச் செய்தார்
பணிவாக நடந்து
பார்புகழ வாழ்ந்தார்

No comments:

Post a Comment