Sunday, April 24, 2016

‪‎பனிச் சாரல் மனதில் தெறிக்குது

பல்லவி

ஆண்‬ -
பனிச் சாரல் மனதில் தெறிக்குது
பெண்ணே உன்னாலே..
அகிம்சையாய் யுத்தம் செய்கிறாய்
கண்ணே கண்ணாலே

‪‎பெண்‬ -
கனி கன்னங்கள் சிவப்பாய் மாறுது
கண்ணா தன்னாலே..!
ஓ. ..மனசோடுது என்னை மீறி
உந்தன் பின்னாலே!

சரணம் 1

பெண் - 
கண்ணே உன் எண்ணங்கள்
நெஞ்சில் அலைமோதும்
ஓயாமல் என் மனம்
தினமும் உனைத் தேடும்

ஆண் - 
நீ வாங்கும் மூச்சிலே
என் ஜீவன் கலந்தோடும்
நீ பார்க்கும் பார்வையில்
காதல் வழிந்தோடும்


சரணம் 2

ஆண் -
வளைந்தோடும் நதிகளின்
அழகும் நீ தானே..
அசைந்தாடும் பூவிலே
உந்தன் முகம் தானே

பெண் -
விழி சிந்தும் ஒளியிலும்
இருப்பது நீ தானே...
இதழோரச் சிரிப்பிலே
இன்பமும் நீ தானே...!

No comments:

Post a Comment