பல்லவி
பூமான் நபி உலகை
புனிதமாக்க வந்தார்
ஈமான் நிலைத்திட
இஸ்லாத்தை தந்தார்
பாவம் யாவும் நீக்கி
பாரில் அமைதி காத்தார்
ஏகனாம் அல்லாஹ்வின்
ஏந்தல் நபியானார்
சரணம் 1
கதீஜாவை மணந்து
முன்மாதிரி ஆனார்; (2)
கைம்பெண்ணும் வாழ - ஒரு
நல் வழியை தந்தார்
ஜாலங்கள் புரிந்து வந்த
ஜாஹிலிய்யா கால
மனிதரை புனிதராக்கி
மனித நேயம் காத்தார்
சரணம் 2
சஹாபாக்கள் தனது
சந்நிதானம் நாடி (2)
மார்க்க உபதேசம் - கேட்டு
வாழ வழி செய்தார்
அபூபக்ர் உஸ்மானும்
உமரும் அலியும்
நல்லாட்சி செய்யவே
நபிகள் வழிகாட்டினார்
No comments:
Post a Comment