Friday, April 1, 2016

என் வாழ்வின் வசந்தங்களே

பல்லவி

என் வாழ்வின் வசந்தங்களே
உன் உயிரே நீர் தானே
சிறப்பாக வளர்த்தெடுத்த
சிறு பயிரும் நான் தானே

கடல் போல நீர் இருந்தீர்
மழைத் துளியாய் நான் மலர்ந்தேன்
உடலுக்குள் கருவானேன்
உம்மாலே உருவானேன்

சரணம் 1

காற்று தந்த சுவாசத்தை
கற்றுத் தந்ததே கருவறை
போற்றுவேன் என் அன்னையே
ஆழமாய் என் உயிர் வரை

பசியோடு நான் காத்திருந்தால்
பாசமாக இலை விரிப்பீர்
ருசியென்று நான் மொழிந்தால்
மெதுவாக இதழ் சிரிப்பீர்



சரணம் 2

மகிழ்ச்சியாய் என் முகமிருந்தால்
மலந்திடும் உங்கள் பூ முகம்
துயரமாய் என் அகமிருந்தால்
துடித்திடும் என் தந்தை மனம்

கால் தடுக்கி நான் விழுந்தால்
கண்ணிலே வருமே நீர்த் துளி
காய்ச்சலாலே நான் படுத்தால்
கலங்கிடும்  உங்கள் இரு விழி

No comments:

Post a Comment